உக்ரைன் நாட்டில் கடந்த 4 நாட்களாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நாட்டின் தலைநகர் கிவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் ஆகியவற்றில் ரஷ்ய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்காரணமாக அங்கு 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தச் சூழலில் உக்ரைன் உடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய அதிகாரிகள் பெலாரெஸில் தயாராக உள்ளதாக தகவல் வெளியானது. 


இந்தநிலையில், உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், மருத்துவக் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் பெருமளவில் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். மத்திய அரசு ஏர்இந்தியா விமானங்களை அனுப்பி இந்திய மாணவர்களை மீட்க முயற்சி செய்து வருகிறது. 


இந்திய மாணவர்கள் உக்ரைனுக்கு செல்ல காரணம் என்ன..? 


இந்தியாவில் இருந்து 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் உக்ரைன் நாட்டிற்கு சென்று மருத்துவம் பயின்று வருகின்றனர். பொதுவாக, இந்தியாவில் 5 வருடங்கள் மருத்துவம் பயில ஒன்று முதல் ஒன்றரை கோடி செலவாகிறது. ஆனால், உக்ரைன் நாட்டில் மொத்தமாகவே 20 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை செலவு செய்தால் போதும். 


அதேபோல், இந்தியாவில் மருத்துவ படிப்புக்கு நீட் ஒரு மிக முக்கிய தேவையாக இருந்து வருகிறது. உக்ரைன் நாட்டில் மேல்படிப்பு படித்தால் போதும் மருத்துவ படிப்பை படிக்கலாம். மாணவர்களுக்கு அனைத்து வசதிகளுடன் உலகத்தரமான கல்வியும், செய்முறை பயிற்சியுடன், ஆங்கிலம், உக்ரேனிய மொழிகளை தேர்வு செய்து கொள்ளலாம். 


மேலும், வெளிநாடுகளில் இருந்து உக்ரைன் வந்து படிக்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து கட்டணத்தில் 50 சதவீத சலுகையையும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் இருந்து உக்ரைன் வந்து படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 22. 9 % ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 


உக்ரைன் நாட்டில் என்னதான் இந்திய மாணவர்கள் மருத்துவம் பயின்றாலும் இந்தியாவில் பயிற்சியை தொடர்வதற்கு தேசிய மருத்துவ ஆணையம் நடத்தும் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும் என்பது கட்டாயம். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண