10th Public Exam Result: நாளை வெளியாகும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்.. வீட்டிலிருந்தப்படியே எப்படி பார்க்கலாம்?

நாளை காலை 9.30 மணிக்கு சென்னை டி.பி.ஐ வளாகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட உள்ளது.

Continues below advertisement

 

Continues below advertisement

நாளை காலை 9.30 மணியளவில் 10 வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இந்த முடிவுகளை  http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் தெரிந்துக்கொள்ளலாம். 

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், 26 மார்ச் தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வை 12,616 பள்ளியை சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள் மற்றும் 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதியுள்ளனர். மேலும், 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 12 முதல் 22-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இந்நிலையில் நாளை காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ  வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகல் வெளியிடப்பட உள்ளது.

நாளை காலை 9.30 மணிமுதல் http://tnresults.nic.in அல்லது http://dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் வீட்டிலிருந்தப்படியே தெரிந்துகொள்ளலாம் என அரசு தேர்வுகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 12 ஆம் வகுப்பு பொதுத்  தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Continues below advertisement