டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை வண்ணாரப்பேட்டை, அரசு வடசென்னை ஐ.டி.ஐ. வளாகத்தில்‌ தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.


இதுகுறித்துச் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ரஷ்மி சித்தார்த்‌ தெரிவித்துள்ளதாவது:


சென்னை, கிண்டி தொழில்சார்‌ வேலைவவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ இயங்கும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தில்‌ தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படவுள்ள கிராம நிர்வாக அலுவலர்‌, இளநிலை உதவியாளர்‌, தட்டச்சர்‌ பதவிகளுக்கான ஒருங்கிணைந்த TNPSC- GROUP IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்‌ வண்ணாரப்பேட்டையில்‌ அமைந்துள்ள அரசு வடசென்னை ஐ.டி.ஐ வளாகத்தில்‌ துவங்கப்பட உள்ளது.


வார நாட்களில் பயிற்சி வகுப்புகள்


இப்பயிற்சி வகுப்பானது வார நாட்களில்‌ (திங்கள்‌ மற்றும்‌ வெள்ளி வரை ) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்‌ தகுதி பத்தாம்‌ வகுப்பு ஆகும்‌.


விண்ணப்பிப்பது எப்படி?


இந்தப் பயிற்சி வகுப்பில்‌ சேர விருப்பமுள்ளவர்கள்‌ விண்ணப்பப் படிவ நகலுடன்‌ தங்களது ஆதார்‌ அட்டை நகல்‌ மற்றும்‌ பாஸ்போர்ட்‌ அளவுள்ள புகைப்படத்துடன்‌ 10/02/2025-ற்குள்‌ சென்னை- 32, கிண்டி, தொழில்சார்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தை நேரடியாக ஏதாவது ஒரு வேலை நாட்களில்‌ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‌.


மேலும்‌, பயிற்சி வகுப்பில்‌ கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்‌ கீழ்கண்ட க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பதிவு செய்து கொள்ளலாம்‌. மேலும்‌ விவரங்களுக்கு cgpecgc@gmail.com என்ற மின்னஞ்சலில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.


வட சென்னையை சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள்‌ இப்பயிற்சி வகுப்பில்‌ சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஜகடே கேட்‌டுக் கொண்டுள்ளார்‌.


2025ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு எப்போது?


2025ஆம் ஆண்டுக்கான தேர்வு  எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. விண்ணப்பப் பதிவு, காலி இடங்கள் உள்ளிட்ட விவரங்கள் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தேர்வர்கள் முன்கூட்டியே குரூப் 4 தேர்வுக்குத் தயார் ஆக வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.