டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதைத் தேர்வர்கள் https://tnpscresults.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 


 


தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌, ஒருங்கிணைந்த குடிமைப்‌ பணிகள்‌-4 நேரடி நியமனத்திற்காக 30.04.2024 அன்று அறிவிக்கை வெளியிட்டது. இத்தெரிவிற்கான எழுத்துத்‌ தேர்வு 09.06.2024 முற்பகல்‌ நடைபெற்றது. இத்தேர்விற்கு 20,36,774 விண்ணப்பதாரர்கள்‌ தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்‌. தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினர்.


3 மாதத்தில் தேர்வு முடிவுகள்


இத்தெரிவிற்கான தேர்வு முடிவுகளை தேர்வாணையம்‌ இன்று (28.10.2024) வெளியிட்டுள்ளது. தேர்வு முடிந்து 92 வேலை நாட்களிலேயே குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இது தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தேர்வர்கள்‌ தங்களது தரவரிசை மற்றும்‌ மதிப்பெண்களை தேர்வாணையத்தின்‌ இணையதளங்களான www.tnpscresults.tn.gov.in மற்றும்‌ www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்‌.


 


தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?


 


* தேர்வர்கள் https://tnpscresults.tn.gov.in/ என்ற இணையதள முகவரிக்குச் செல்லவும்.


 


* உங்கள்‌ பதிவு எண்ணை உள்ளிடவும்‌.



* உங்கள்‌ பிறந்த தேதியை உள்ளிடவும்‌.


 


* Captcha-வை உள்ளிடவும்‌.


 


* சப்மிட் கொடுக்கவும். 


 



 


இப்படியும் தேர்வு முடிவுகளைப் பார்க்கலாம்


 


அதேபோல https://apply.tnpscexams.in/result-groupIV/vRjxPrEapJD6upVCx42gMmP5zdAUyCjd என்ற இணைப்பை க்ளிக் செய்தும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 


 


அதில்,


 


* உங்கள்‌ பதிவு எண்ணை உள்ளிடவும்‌.



* உங்கள்‌ பிறந்த தேதியை உள்ளிடவும்‌.


 


* Captcha-வை உள்ளிடவும்‌.


 


* சப்மிட் கொடுக்கவும். 


 


இவ்வாறு செய்து தேர்வு முடிவுகளைக் காணலாம்.  


தேர்வர்கள்‌ மதிப்பெண்கள்‌, தரவரிசைப் பட்டியலும் வெளியீடு


தேர்வாணையத்தின்‌ செயல்பாடுகளில்‌ வெளிப்படைத்‌ தன்மையினை உறுதிசெய்யும்‌ பொருட்டு தேர்வர்கள்‌ இத்தேர்வில்‌ பெற்ற மதிப்பெண்கள்‌, அவர்களின்‌ ஒட்டுமொத்த தரவரிசை, இனசுழற்சிக்கான தரவரிசை மற்றும்‌ சிறப்பு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன.


தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை, இணையவழி விண்ணப்பத்தில்‌ கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள்‌, உரிமைக் கோரல்கள்‌ மற்றும்‌ நியமன ஒதுக்கீட்டு விதிகளின்‌ அடிப்படையில்‌, தேர்வாணையத்தால்‌ நிர்ணயிக்கப்படும்‌ விகிதத்தில்‌, தேர்வர்கள்‌ சான்றிதழ்‌ சரிபார்க்கும்‌ நிலைக்கு தெரிவு செய்யப்படுவர்‌.


அஞ்சல்‌ / கடிதம்‌ அனுப்பப்படமாட்டாது


சான்றிதழ்‌ சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்படுபவர்களின்‌ பட்டியல்‌ விரைவில்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ வெளியிடப்படும்‌. அத்தகைய தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும்‌ மின்னஞ்சல்‌ வழியாக மட்டுமே விவரங்கள்‌ தெரிவிக்கப்படும்‌. அஞ்சல்‌ / கடிதம்‌ வழியாக தகவல்கள்‌ ஏதும்‌ அனுப்பப்படமாட்டாது.


 


கூடுதல் தகவல்களுக்கு: https://www.tnpsc.gov.in/