சென்னைமாவட்டத்தைச் சேர்ந்ததகுதிவாய்ந்தஅனைத்துவகைமாற்றுத் திறனாளிமாணவமாணவியர்களுக்குதமிழ்நாடுஅரசுபணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ளகுரூப் 2, 2ஏதேர்விற்கான இலவசபயிற்சிவகுப்பில் சேர்ந்துபயன்பெறுமாறுசென்னைமாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து சென்னைமாவட்ட ஆட்சித் தலைவர் கூறி உள்ளதாவது:
சென்னைமாவட்டம், கிண்டி, மாற்றுத் திறனாளிகளுக்கானசிறப்புவேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தின் சார்பில் அனைத்து வகைமாற்றுத்திறனாளிமாணவமாணவியர்களுக்குதமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ளடிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்விற்கானஇலவசபயிற்சிவகுப்புகள் 21-07-2025 முதல் துவங்கப் பெற்றுநடைபெற்றுவருகிறது.
இந்தப் பயிற்சிவகுப்பானதுவார நாட்களில் திங்கள் முதல் வெள்ளிவரைகாலை 10.00 மணிமுதல் மதியம் 1.00மணிவரைசாந்தோம்நெடுஞ்சாலை, மைலாப்பூர், சென்னையில் உள்ள CSI காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறஉள்ளது.
ஆகஸ்ட் 13 கடைசி
இத்தேர்விற்கானகல்வித் தகுதிபட்டப்படிப்புஆகும். இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்ககடைசிதேதி 13.08.2025 ஆகும். சென்னைமாவட்டத்தைச் சேர்ந்ததகுதி வாய்ந்தஅனைத்துவகைமாற்றுத்திறனாளிமாணவ மாணவியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
இணையவழியில் தேர்வுக்குவிண்ணப்பித்த, விண்ணப்பப் படிவநகலுடன் தங்களதுஆதார் அட்டைநகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு உள்ளபுகைப்படத்துடன் இந்தக் கட்டணமில்லாபயிற்சி வகுப்பில் கலந்துகொண்டுபயன் பெறலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர்கேட்டுக் கொண்டுள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: https://chennai.nic.in/
