சென்னை மாவட்டத்தைச்சேர்ந்த தகுதிவாய்ந்த அனைத்துவகை மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையத்தால்நடத்தப்படவுள்ள குரூப் 2, 2ஏ தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில்சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்கூறி உள்ளதாவது:

சென்னை மாவட்டம்‌, கிண்டி, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும்தொழில்நெறி வழிகாட்டும்மையத்தின்சார்பில்அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர்தேர்வாணையத்தால்நடத்தப்பட உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்‌ 21-07-2025 முதல்துவங்கப் பெற்று நடைபெற்று வருகிறது.

இந்தப் பயிற்சி வகுப்பானது வார நாட்களில்திங்கள்முதல்வெள்ளி வரை காலை 10.00 மணி முதல்மதியம் 1.00 மணி வரை சாந்தோம் நெடுஞ்சாலை, மைலாப்பூர்‌, சென்னையில்உள்ள CSI காது கேளாதோர்மேல்நிலைப்பள்ளியில்நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 13 கடைசி

இத்தேர்விற்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும்‌. இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13.08.2025 ஆகும்‌. சென்னை மாவட்டத்தைச்சேர்ந்த தகுதி வாய்ந்த அனைத்துவகை மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள்இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

இணைய வழியில்தேர்வுக்கு விண்ணப்பித்த, விண்ணப்பப் படிவ நகலுடன்தங்களது ஆதார்அட்டை நகல்மற்றும்பாஸ்போர்ட்அளவு உள்ள புகைப்படத்துடன்இந்தக் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில்கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: https://chennai.nic.in/