மாநிலம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள சார்பதிவாளர், இளநிலை உதவியாளர், வனவர் உள்ளிட்ட பல்வேறு காலி இடங்களை நிரப்ப, குரூப் 2, 2 ஏ தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கு இன்று (ஜூலை 15) முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 18ஆம் தேதி 12.01 மணி முதல் 20ஆம் தேதி 11.59 மணி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். மொத்தம் 645 இடங்களுக்கு இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.
முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்போது, முதன்மைத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
வயது, ஊதியம்
ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ற வகையில் வயது வரம்பு பல்வேறு விதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஊதியமும் நிலை 18, 16, 11, 10 என பல விதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி என்ன?
ஒவ்வொரு பதவிக்கும் வெவ்வேறு விதமான கல்வித் தகுதி கூறப்பட்டு இருந்தாலும், பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. வனவர் உள்ளிட்ட சில பதவிகளுக்கு மட்டும் மருத்துவ மற்றும் உடல் தகுதி அவசியம் ஆகும்.
தேர்வு முறை
- முதல்நிலைத் தேர்வு
- முதன்மைத் தேர்வு
இதில் முதன்மைத் தேர்வுகள் தனித்தனியாக குரூப் 2 பணிகளுக்கும் குரூப் 2 ஏ பணிகளுக்கும் தனித்தனியாக நடைபெறும்.
இந்த 2 தேர்வுகளோடு வனவர் பணிக்கு, நடைச் சோதனை கூடுதலாக நடத்தப்படும். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவும் யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ%3D%3D என்ற இணைப்பை தேர்வர்கள் க்ளிக் செய்ய வேண்டும்.
அதில் தேர்வர் பெயர், இ மெயில் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட போதிய விவரங்களை உள்ளிட்டு, விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.
முழு விவரங்களுக்கு: https://tnpsc.gov.in/Document/tamil/GRP2_11_2025_TAMIL.pdf என்ற அறிவிக்கையை முழுமையாகப் படித்து அறிந்து கொள்ளலாம். இதிலேயே பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் விரிவாகக் கொடுக்கப்பட்டு உள்ளன.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnpsc.gov.in/