குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த இன்னும் 2 நாட்களே உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்‌ (முதன்மை) தேர்வு - ॥ (குரூப் ॥ மற்றும்‌ ॥ ஏ பணிகள்‌) விண்ணப்பிக்க தேர்வுக் கட்டணம்‌ செலுத்த டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த கடைசி நாள்‌: 18.12.2024 ஆகும்.


இதற்கு 20% தேர்வர்கள்‌ தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தி விட்டனர்‌ என்றும் தேர்வுக் கட்டணச் சலுகை கோராத தேர்வர்கள்‌, முதன்மைத் தேர்வுக்‌ கட்டணத்தை செலுத்தவில்லை எனில்‌, அவர்களுக்கு தேர்வெழுத அனுமதிச் சீட்டு வழங்கப்பட மாட்டாது. எனவே தேர்வர்கள்‌ கடைசி நாள்‌ வரை காத்திராமல்‌, உடனே தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


குரூப் 2 பணியிடங்கள் எப்படி?


குரூப் 2 பணிகளுக்கு மொத்தம் 534 காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், முதன்மைத் தேர்வுக்கு 7,987 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குரூப் 2 ஏ பணிகளுக்கு, 2,006 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்காக 21,822 பேர் முதன்மைப் பணிகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல்நிலைத் தேர்வு முடிவுகள் டிசம்பர் 12ஆம் தேதி வெளியான நிலையில், இவர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வுகள் 2025ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளன.






தேர்வு எப்போது?


குறிப்பாக தாள் 1 மற்றும் தாள் 2 ஆகியவை வெவ்வேறு நாட்களில் நடக்கின்றன. குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான முதல் தாள் பிப். 2ஆம் தேதி முற்பகலில் நடைபெற உள்ளது. அதேபோல குரூப் 2 தேர்வு இரண்டாம் தாள் பிப்.23ஆம் தேதி முற்பகலில் விரிந்துரைக்கும் வகையில் நடைபெற உள்ளது. அதேபோல குரூப் 2 ஏ இரண்டாம் தாள் பிப்ரவரி 8ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்வு கொள்குறி வகையில் நடைபெற உள்ளது.


இதற்கு விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த நாளை மறுநாள் (டிசம்பர் 18) கடைசித் தேதி ஆகும்.