Group 1 exam: 92 இடங்களுக்கு 3.16 லட்சம் பேர் போட்டி: குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு நிறைவு

92 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

92 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் (ஆகஸ்ட் 22ஆம் தேதி) நிறைவு பெற்ற நிலையில், விண்ணப்பித்த நபர்களின் விவரம் வெளியாகி உள்ளது.

TNPSC  நடத்தும் துணை ஆட்சியர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு குருப்-1 பதவிகளுக்கான தேர்வுக்கு ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் விண்ணப்பித்தனர்.

பணி குறித்த விவரங்கள்:

பணிகள்:

துணை ஆட்சியர் (18) - Deputy Collector,
காவல்துறை துணை கண்காணிப்பாளர் (26) - Deputy Superintendent of Police,
வணிகவரி உதவி ஆணையர் (25) - Assistant Commissioner (Commercial Taxes),
 கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர் (13)- Deputy Registrar of Cooperative Societies,
Assistant Director of Rural Development,
District Employment Officer in Tamil Nadu General Service உட்பட குரூப்-1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்கள்.

விண்ணப்பிக்கக் கால அவகாசம் நேற்றுடன் (22-08-2022) முடிவடைந்தது.

விண்ணப்பித்த பின் திருத்தங்களை மேற்கொள்வதற்கான தேதி: 27.08.2022 - நள்ளிரவு 12.01 மணி முதல் முதல் 29.08.2022 - இரவு 11.59 வரை

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு

முதல்நிலை தேர்வு நடைபெறும் தேதி: 30-10-2022 காலை 9.30 முதல் 12.30 மணி வரை

*அடுத்த தேர்வுகள் பின்னர் அறிவிக்கப்படும்.

கல்வித் தகுதி: பட்டப்படிப்பு  முடித்திருக்க வேண்டும்

வயது: குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்ச வயதானது, சில பிரிவினருக்கு ஏற்ப மாறுபடுகிறது.

காலி பணியிடங்கள்: 92

சம்பளம்: ரூ.56,100 முதல் 2,05,700 

விண்ணப்பக் கட்டணம்:

பதிவுக் கட்டணம்: ரூ.150

முதல் நிலைத் தேர்வுக்கான கட்டணம்: ரூ.100

முதன்மைத் தேர்வுக்கான கட்டணம்: ரூ.200

கட்டணமில்லாமல் விண்ணப்பிப்பது எப்படி?

எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு முழுமையாகக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

அதேபோல எம்பிசி/ டிஎன்சி பிரிவினர் 3 முறை இலவசமாகத் தேர்வு எழுதலாம்.

பிசி, பிசி முஸ்லிம் பிரிவினருக்கும் 3 முறை இலவசமாகத் தேர்வு எழுதும் வசதி வழங்கப்படுகிறது.

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 2 முறை இலவச வாய்ப்பு உண்டு. 

மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கும் முழுமையாகக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வர்கள் http://tnpsc.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து வந்த நிலையில், முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நேற்றுடன் (ஆகஸ்ட் 22ஆம் தேதி) நிறைவு பெற்றது. இந்த நிலையில் 3,16,678 பேர் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 

பணி குறித்த கூடுதல் தகவல்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/english/Group%20-I%20Notification_English.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

Continues below advertisement
Sponsored Links by Taboola