மின்கம்பியாள்‌ உதவியாளர்‌ தகுதிகாண்‌ தேர்வு குறித்து வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement


இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை கூறி உள்ளதாவது:


2025-ம்‌ ஆண்டு டிசம்பர்‌ 13 மற்றும்‌ 14 ஆகிய தேதிகளில்‌ மின்கம்பியாள்‌ உதவியாளர்‌ தகுதிகாண்‌ தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெற உள்ளது.


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


இது குறித்து தகுதி வாய்ந்த கம்பியாள்‌ உதவியாளர்களிடம் இருந்தும்‌, இத்துறையால்‌ நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலைநேர வகுப்பில்‌ மின்கம்பியாள்‌ பிரிவில்‌ பயிற்சி பெற்றுத்‌ தேறியவர்களிடம் இருந்தும்‌ மற்றும்‌ தேசிய புனரமைப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ இத்துறையால்‌ நடத்தப்பட்ட மின்சாரப்‌ பணியாளர்‌ மற்றும்‌ கம்பியாள்‌ தொழிற்பிரிவுகளில்‌ பயிற்சி பபற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.


தகுதி என்ன?


விண்ணப்பதாரர்‌ மின்‌ ஒயரிங்‌ தொழிலில்‌ 5 வருடங்களுக்குக்‌ குறையாமல்‌ செய்முறை அனுபவம்‌


உள்ளவராகவும்‌, விண்ணப்பிக்கும்‌ நாளில்‌ 21 வயது நிரம்பியவராகவும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. அதிகபட்ச வயது வரம்பு இல்லை.


இத்தேர்விற்குரிய விண்ணப்பப்‌ படிவம்‌ மற்றும் விளக்கக் குறிப்பேட்டை http://skilltraining.tn.gov.in  என்ற இணையதளத்தின்‌ மூலம்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேர்வு மையங்களாக உத்தேசிக்கப்பட்டுள்ள கீழ்க்கண்ட அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ ஒரு


தொழிற்பயிற்சி நிலையத்தை விண்ணப்பதாரரே தேர்வு செய்து அத்தேர்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும்‌.


வட சென்னை


கோவை


சேலம்


நாமக்கல்


கடலூர்


கரூர்


பெரம்பலூர்


திண்டுக்கல்


புதுக்கோட்டை


நாகர்கோவில்


அம்பத்தூர்


செங்கல்பட்டு


ஓசூர்


ஈரோடு


திருச்சி


உளுந்தூர்பேட்டை


திருநெல்வேலி


தஞ்சாவூர்


மதுரை


தேனி


தர்மபரி


விருதுநகர்‌


தூத்துக்குடி


வேலூர்


திருவண்ணாமலை


குன்னூர்


அரியலூர்


நீடாமங்கலம்


நாகப்பட்டினம்


ராமநாதபுரம்


சிவகங்கை


திருப்பூர்


திண்டிவனம்


ராணிப்பேட்டை


தென்காசி


போதுமான விண்ணப்பங்கள்‌ பெறப்படாத நிலையில்‌ மேற்கண்ட தேர்வு மையங்களில்‌ பெறப்படும்‌ விண்ணப்பங்கள்‌ அருகிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாறுதல்‌ செய்யப்பட்டு அங்கு தேர்வுகள்‌ நடைபெறும்‌. தேர்வு மையம்‌ இறுதி செய்வது தொடர்பாக துறைத்‌ தலைவரின்‌ முடிவே இறுதியானது.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்‌ படிவங்கள்‌ மேற்கண்ட அரசினர்‌ தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களுக்கு கிடைக்க வேண்டிய கடைசித்‌ தேதி - 17.10.2025


கூடுதல் தகவல்களுக்கு: http://skilltraining.tn.gov.in


இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித் துறை இயக்குநர்‌ அழைப்பு விடுத்துள்ளார்.