தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி.


தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி 12ஆம் வகுப்புக்கான பொது தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகம் முழுவதும் உள்ள மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் இன்று தமிழக கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.


TN 12th Result 2023: தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்வில் எத்தனை பேர் தேர்ச்சி தெரியுமா?


இந்நிலையில் திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், கணினி பயன்பாடு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மொத்த மதிப்பெண் 600 க்கு 600 மதிப்பெண் வாங்கியுள்ளார். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் முதலிடமும் தமிழகத்தில் முதலிடமும் பெற்றுள்ளார்.




10th Result Date 2023: திடீர் அறிவிப்பு; 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு தேதி மாற்றம்- அமைச்சர் அன்பில் பேட்டி


மேலும் இப்பள்ளி மாணவி நந்தினி இப்பள்ளியில் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்து வந்தார். மேலும் இப்பள்ளியின் பள்ளி தாளாளர் ஜெயபால், தலைமை ஆசிரியர் அகிலா, தமிழ் ஆசிரியர் அனுராதா, ஆங்கில ஆசிரியர் தீபா, மரிய சாந்திராஜலட்சுமி, அஷ்டலட்சுமி ஆகியோர் தனக்கு ஊக்கமளித்ததாகவும், அதிக மதிப்பெண் பெறுவதற்கு அனைவரும் ஊக்குமளித்ததாகவும் தனது வெற்றிக்கு தனது பெற்றோரும் உறுதுணையாக இருந்ததாகவும் கூறினார். மேலும் நந்தினி தந்தை சரவணகுமார் தச்சு தொழிலாளியாக உள்ளார். அம்மா பாலபிரியா மற்றும் ஆறாம் வகுப்பு படிக்கும் பிரவீன் என்ற சகோதரரும் உள்ளார்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண