பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு விடைத் தாட்களின் நகலினை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதேபோல மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள், தவறு கண்டவர்கள் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு விடைத் தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளல் சம்பந்தமாகவும் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் குறித்தும் முக்கிய அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:
ஜூலை- 2025 பத்தாம் வகுப்பு துணை பொதுத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்களின் விடைத்தாள் நகலினை இன்று - 14.08.2025 (வியாழுக்கிழமை) பிற்பகல் முதல் பெறலாம்.
எப்படி?
- தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
- அதில், Notification பகுதியை க்ளிக் செய்யவும்.
- உடன் "SSLC JULY- 2025 - Answer Script Scanned Copy Download” என்ற வாசகத்தினை க்ளிக் செய்யவும்.
- செய்தால் தோன்றும் பக்கத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத் தாள்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறு கூட்டல்அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பது எப்படி?
விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறு கூட்டல்அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் "Application for Retotalling/Revaluation" என்ற தலைப்பினை க்ளிக் செய்ய வேண்டும்.
க்ளிக் செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
தேர்வர்கள் இவ்விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து 18.08.2025 (திங்கட்கிழமை) காலை 11.00 மணி முதல் 19.08.2025 (செவ்வாய்கிழமை) மாலை ௧5.00 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும்.
அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலக முகவரியை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Press Release என்பதை க்ளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.
தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத் தொகையைப் பணமாகச் செலுத்த வேண்டும்.
மறுமதிப்பீடு
பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ. 505/-
மறுகூட்டல்
பாடம் (ஒவ்வொன்றிற்கும்) - ரூ.205/-
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.