விழுப்புரம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி  விவரம் : 


விழுப்புரம் மாவட்டம் பத்தாம் வகுப்பில்  90.57 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர், கடந்தை ஆண்டை காட்டிலும் 1.42 சதவீதம் குறைவு... விழுப்புரம்  மாவட்டத்திலிருந்து நடப்பாண்டு 12,451 மாணவர்கள், 12,232 மாணவிகள் என 24,683 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், 10,886 மாணவர்கள், 11,470 மாணவிகள் என மொத்தம் 22,365 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 87.43 ஆகவும், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 93.77 ஆகும். சேலம் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 90.57% ஆகும். அரசு பள்ளிகளை பொறுத்தவரை 230 பள்ளிகளைச் சேர்ந்த 7,871 மாணவர்கள், 8526 மாணவிகள்  தேர்வு எழுதி நிலையில், மாணவர்கள் 6619 பேரும், மாணவிகள் 7874 பேரும் மொத்தம் 14,493 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 88.39 ஆக உள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 91.99 சதவீதம்  எடுத்த நிலையில் இந்த ஆண்டு தற்போது 90.57 சதவீதம்  மட்டுமே எடுத்துள்ளனர். இதனால் 1.42 சதவீதம்  குறைந்துள்ளது.


தேர்வு முடிவு


தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in  ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவ, மாணவிகள்  தெரிந்துக் கொள்ளலாம். மேலும் தேர்வர்கள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்ணுக்கும் முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


மாவட்ட வாரியாக விவரம்


இதனிடையே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் (97.67% ),  சிவகங்கை (97.53%),  விருதுநகர் (96.22%) ஆகிய மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளது. 4வது இடத்தில் கன்னியாகுமரி (95.99%), 5வது இடத்தில் தூத்துக்குடி (95.58%), 6வது இடத்தில் அரியலூர் (95.40%), 7வது இடத்தில் ஈரோடு (94.43%), 8 வது இடத்தில் திருச்சி (94.28%), 9வது இடத்தில் திருநெல்வேலி (94.19%), 10வது இடத்தில் தென்காசி (94.12%)  ஆகிய மாவட்டங்கள் முதல் 10 இடத்தில் உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் 83.54 சதவீத தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பெற்றுள்ளது.  


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண