தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களை தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பெற்றுள்ளார். 


10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகளை இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். நடப்பாண்டில் 10ஆம் வகுப்பில் மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். அவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 52 ஆயிரத்து 499 பேர் ஆவர். மாணவிகள் மொத்தம் 4 லட்சத்து 60 ஆயிரத்து 120 ஆகும். மூன்றாம் பாலினத்தவர் 1 நபர் ஆவார்.


10ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 90.07 சதவீதம் மாணவர்கள் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4 லட்சத்து 27 ஆயிரத்து 73 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 3 லட்சத்து 94 ஆயிரத்து 920 பேர் அடைந்துள்ளனர். அதாவது 85.83 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 714 ஆகும். இவற்றில் மேல்நிலைப்பள்ளிகள் 7 ஆயிரத்து 456 ஆகும். உயர்நிலைப்பள்ளிகள் 5 ஆயிரத்து 258 ஆகும். இவற்றில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்து 6 ஆகும். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகளின் மொத்த எண்ணிக்கை 886 ஆகும்.


தமிழில் 94.84 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 96.18 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதத்தில் 90.89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 93.67 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 91.86 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாவணர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 16 ஆகும். அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 5 ஆயிரத்து 424 ஆகும். அதாவது 90.15 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 242 பேர் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். அவர்களில் 133 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 519 நபர்கள் ஆவர்.




இதில் தமிழ் பாடத்தில் ஒரேயொரு மாணவர் மட்டுமே நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மொழிப் பாடத்தில் நூறு மதிப்பெண்கள் என்னும் சாதனை எல்லோருக்கும் சாத்தியம் ஆவதில்லை.


இந்நிலையில் 10 ஆம் வகுப்புத் தமிழ் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்று, திருச்செந்தூரைச் சேர்ந்த மாணவி துர்கா சாதனை படைத்துள்ளார். திருச்செந்தூர் அருகே உள்ள காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி இவர்.


இவரது தந்தை பெயர் செல்வகுமார். இவர் ஆறுமுகநேரி பகுதியைச் சார்ந்த காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவி துர்காவுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண