அரசு பள்ளி ஆசிரியர் ரூ.250 லஞ்சம் பெற்றதாக தமிழ்நாடு பாஜக சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட தவறான தகவல் என்று தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
250 ரூபாய் சட்டவிரோதமாக லஞ்சம்
பரவும் செய்தி:
திருப்பூர் நஞ்சப்பா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையின்போது ஆசிரியர் ரூ.250 லஞ்சம் வசூலித்ததாகக் குறிப்பிட்டு தமிழ்நாடு பாஜக சமூக வலைத்தளப் பக்கத்தில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவல்.
இது குறித்து திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அளித்துள்ள விளக்கத்தில், “சம்பந்தப்பட்ட அரசு பள்ளியில் மேல்நிலை வகுப்புகளுக்கான சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கட்டணம் மட்டுமே வசூல் செய்யப்பட்டது.
எதற்காக கட்டணம்?
குறிப்பாக மாணவர்களிடம் பெற்றோர் ஆசிரியர் கழகக் கட்டணமாக ரூ.50, தேர்வுக்கான ரெக்கார்டு கட்டணமாக ரூ.100 மற்றும் விடைத்தாள் கட்டணமாக ரூ.50 என ரூ.200 வசூலிக்க பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் குழுவால் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி ரூ.200 மட்டுமே மாணவர்களிடம் கட்டணமாகப் பெறப்பட்டுள்ளது. ரூ.250 கட்டணம் வசூல் என்று வெளியான செய்தி தவறானது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
