தஞ்சாவூர்: குழந்தைகள் சிரித்தால் பூக்கள் தாங்களும் சேர்ந்து சிரித்துச் சிலிர்க்கும். குழந்தைகள் நடந்து வந்தால் புயல் கூட விலகி நிற்கும். ஓடி விளையாடும் சின்னஞ்சிறு குட்டிப்புயல்களை கண்டு தென்றலும் திகைத்து நிற்கும். குருவியினங்களும் கவிதைப்பாடும். வெற்றி மாலை சூடி வரும் மாணவச் செல்வங்களை கண்டால் வானுயர்ந்த மரங்களும் பூத்தூவும். கரைகளைக் கடக்கும் துணிவிருந்தால்தான் புதிய கடல்களை கண்டுபிடிக்க முடியும். கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை; நிச்சயமாக எதுவும் இல்லை என்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தெரிவித்தார். அதுபோல் கடின முயற்சி, போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை குவித்து ஆரம்ப வகுப்பிலேயே அசத்துகின்றனர் வல்லம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள். இந்த குட்டிப்புயல்களின் அதிரடி வெற்றிக்களங்களும், பரிசுகளும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. பரிசுகளையும், சான்றிதழ்களையும் குவித்து மேல்நிலை வகுப்பு மாணவிகளையும் அசரடிக்கின்றனர். தஞ்சை மாவட்டம் வல்லத்தில் இயங்கி வருகிறது அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவிகள் மட்டும் பயின்று வருகின்றனர். இந்த தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் தான் பல்வேறு போட்டிகளில் அசத்தல் வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தி உள்ளனர். 1ம் வகுப்பு மாணவி சஹானா அருள்மொழி சன்மார்க்க சபை நடத்திய திருவருட்பா ஒப்பித்தல் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். ராம்சரண் இரண்டாம் பரிசும், ஹரிஹரசுதன் மூன்றாம் பரிசும் பெற்று அசத்தியுள்ளனர். இதேபோல் ஆர்சிபா முதல் பரிசு, கீர்த்திகா இரண்டாம் பரிசு, தஸ்னீம், ரித்தீஷ் 3ம் பரிசு பெற்று பாராட்டுக்களை குவித்துள்ளனர்.
குட்டி புயல்களின் சூறாவளி வெற்றிகள்; பள்ளிக்கு பெருமை சேர்க்கும் தொடக்கப்பள்ளி குழந்தைகள்
என்.நாகராஜன் | 30 Nov 2023 07:28 PM (IST)
இந்த குட்டி புயல்களின் சூறாவளி போன்ற வெற்றிகள் பள்ளிக்கு மேன்மேலும் பெருமையை சேர்த்து வருகிறது.
பள்ளி மாணவ, மாணவிகள்
Published at: 30 Nov 2023 07:28 PM (IST)