நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநர் ஆர்.என். ரவியிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக,கடந்தாண்டு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நீட் தேர்வுக்கு எதிராக விலக்கு கோரி மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. இந்த சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். 


இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள மாணவர்களை நீட் தேர்வு காக்கிறது. நீட் தேர்வு சமூக நீதியை உறுதி செய்வதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் விளக்கம் அளித்தது. ஆளுநரின் இந்த நடவடிக்கை தமிழக அரசிற்கும், தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த நிலையில் குடியரசு தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையின் போது, தமிழக எம்.பிக்கள் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் சபாநாயகர் வெங்கையா நாயுடு அதற்கு அனுமதி தரவில்லை. இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.




இதைத்தொடர்ந்து இன்று மீண்டும் நீட் மசோதாவை நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் கூடியது. சபா நாயகர் உரையுடன் தொடங்கிய இந்த சிறப்புக்கூட்டத்தில் கூட்டணிக்கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகள் நீட் தேர்வு குறித்தான தங்களது கருத்தை முன்வைத்தனர். ஆனால் பாஜக நீட் விலக்கு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது. இறுதியாக பேசிய முதல்வர் ஸ்டாலின், மீண்டும் நிறைவேற்றப்பட்டிருக்கும் நீட் மசோதாவை ஆளுநர் நிச்சயம் குடியரசுத்தலைவருக்கு அனுப்புவார் என்று நம்புவதாக கூறினார். 


ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது மக்களிடம் கருத்து கேட்டு 193 பக்க  அறிக்கையை சமர்பித்தது. நீண்ட பரிசீலனைக்கு பிறகு, நீட் விலக்கு மசோதா இந்த சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த நீட் விலக்கு மசோதாவை ஆளுநர், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் 142 நாட்கள் அதை வைத்திருந்து விட்டு, நமக்கே அதை திருப்பி வந்திருக்கிறது. 2, 3 ஆண்டுகள் பணம் செலுத்தி பயிற்சி பெற முடிந்தவர்கள் மட்டுமே நீட்  தேர்வில் நுழைய முடியும் என்பது 21 ஆம் நூற்றாண்டின் மாபெரும் அறிவு தீண்டாமை. நீட் தேர்வு பணக்கார நீதியை பேசுகிறது என்று தெரிவித்திருந்தார். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண