TN 12th Result 2022: விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 19,311 மாணவ, மாணவிகள் தேர்ச்சி..!

விழுப்புரம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் என  20972 பேர் தேர்வு எழுதினர். இதில் 10263 மாணவர்களில் 9114 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 19,311 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 92.08 சதவீதம் ஆகும். விழுப்புரம் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் என  20972 பேர் தேர்வு எழுதினர். இதில் 10263 மாணவர்களில் 9114 மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 1149 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். 10709 மாணவிகளில் 10197 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 512 மாணவிகள் தோல்வி அடைந்துள்ளனர்.  பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொத்தம் மாணவ மாணவிகள் என 1661 அடைந்துள்ளனர்.

Continues below advertisement

பள்ளி கழிவறையை சுத்தம் செய்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் - வைரலாகும் புகைப்படம்

12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் வெளியிட்டார். இதில், 93.76 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 12ம் வகுப்புக்கு கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் பொதுத் தேர்வு தொடங்கி மே 28ம் தேதி நிறைவுற்றது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 8 லட்சத்து 37ஆயிரத்து 317 பேர் எழுதியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 140க்கும் மேற்பட்ட மையங்களில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த பணியில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததையொட்டி 10  மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி,  தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவுகளை வெளியிட்டார். www.tnresults.nic.in www.tnresults.nic.in www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in www.dge.tn.gov.in தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

விழுப்புரம் மாவட்டத்தின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நிலவரம் :

விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 229 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினர். இந்த நிலையில் 7595 மாணவர்கள் 8219 மாணவிகள் என மொத்தம் 15,814 பேர் தேர்வு எழுதினர். இதில் 7595 மாணவர்களில் 6490 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 1103  மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். 8219 மாணவிகளில் 7770 மாணவிகள் தேர்ச்சியும்,449 மாணவிகள் தோல்வி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண 

Continues below advertisement
Sponsored Links by Taboola