தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதில்,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5-ஆம் தேதி தொடங்கி மே- 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதற்கடுத்தபடியாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9-ஆம் தேதி நிறைவடைந்தது.


 




10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் 17-ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23-ஆம் தேதியும், வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 10 ஆம் மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டன. இரண்டு தேர்வு முடிவுகளும் ஜூன் 20- ஆம் தேதி வெளியாகும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இந்த அறிவிப்பு படி,  ஜூன் 20-ஆம் தேதியான இன்று, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 203 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மாவட்டத்தில் 14 ஆயிரத்து 036 மாணவர்களும் , 14 ஆயிரத்து 182 மாணவிகளில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியதில் இன்று வெளியான தேர்வு முடிவில் மாவட்டத்தில் 11ஆயிரத்து 714 மாணவர்களும், 13 ஆயிரத்து 198 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


 




 


மாவட்டத்தில் 83.46% மாணவர்களும் , 93.06% மாணவிகளும் என மொத்தம் தேர்வு முடிவில் 88.28% மாணவர்கள் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 87.77% மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகத்தில் முன்னிலையில் உள்ளது. இதில் அதிக அளவில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களுடன் முன்னிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதிய 10ஆயிரத்து 446 மாணவர்களும், 10 ஆயிரத்து 421 மாணவிகளும் தேர்வு எழுதியதில் 8 ஆயிரத்து8 41மாணவர்களும் , 9ஆயிரத்து 757 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 92.90% மாணவர்களும் , 96.143மாணவிகளும் என மொத்தம் 94.70% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண