10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை நாளை (மார்ச் 4) முதல் பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் சசிகலா, அனைத்து மாவட்டங்களின் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (இடைநிலை/ தனியார் பள்ளிகள் ) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் மார்ச்/ ஏப்ரல் 2026ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளி மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

நடைபெற உள்ள மார்ச்/ ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்கள், 04.03.2026 (நாளை) பிற்பகல் முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பெறலாம்.

Continues below advertisement

ஹால் டிக்கெட்டைப் பெறுவது எப்படி?

பள்ளி ஆசிரியர்கள் dgeapp.tnschools.gov.in என்ற இணைய தளத்தை க்ளிக் செய்ய வேண்டும். பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.

இந்த விவரத்தினை முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தனியார் பள்ளிகள்), புதுச்சேரியில் இணை இயக்குநர் (கல்வி) மற்றும் காரைக்காலில் முதன்மை கல்வி அலுவலர் ஆளுகைக்கு உட்பட்ட அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களிடமும் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுத்தேர்வு தேதிகள் இதோ!

மார்ச் 11 – தமிழ், மொழிப்பாடம்

மார்ச் 16- ஆங்கிலம்

மார்ச் 25- கணிதம்

மார்ச் 30- அறிவியல்

ஏப்ரல் 2 – சமூக அறிவியல் பாடத்துக்கான பொதுத்தேர்வு

மே 20ஆம் தேதி 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நேற்று (மார்ச் 2) 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் 9,019 மாணவர்கள் எழுத வரவில்லை.