திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்ட 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் முழு விவரம்..!

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்

Continues below advertisement

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், இந்தாண்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டன. குறிப்பாக 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதில்,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி தேர்வு முடிவடைந்தது. இதற்கடுத்தபடியாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1 ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்கள் முடிக்கும் பணி ஜூன் 9-ஆம் தேதி நிறைவடைந்தது.

Continues below advertisement

 


10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதியும், 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23-ஆம் தேதியும், வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 10 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.  12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகின்றன. இரண்டு தேர்வு முடிவுகளும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகும் என்று பின்னர் அறிவிக்கப்பட்டது. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இந்த அறிவிப்பு படி,  ஜூன் 20-ஆம் தேதியான இன்று, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்  மாவட்டத்தில் 16 ஆயிரத்து 622 மாணவர்களும் , 15 ஆயிரத்து 583 மாணவிகளில் தேர்வு எழுதியதில் இன்று வெளியான தேர்வு முடிவில், மாவட்டத்தில் 14ஆயிரத்து 971 மாணவர்களும், 15 ஆயிரத்து 002 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 90.07% மாணவர்களும் , 96.27% மாணவிகளும் என மொத்தம் தேர்வு முடிவில் 93.07% மாணவர்கள் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

 


திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரையில் சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகத்தில் முன்னிலையில் உள்ளது. இதில் அதிக அளவில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களுடன் முன்னிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதிய 12 ஆயிரத்து 401மாணவர்களும், 12 ஆயிரத்து 010 மாணவிகளும், தேர்வு எழுதியதில் 10 ஆயிரத்து 616 மாணவர்களும் , 11 ஆயிரத்து 228 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 85.61% மாணவர்களும் , 96.143மாணவிகளும் என மொத்தம் 93.49% சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

Continues below advertisement
Sponsored Links by Taboola