தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டு வசதி மற்றும்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ இனத்தைச்‌ சார்ந்தவர்களுக்கு மருத்துவம்‌ தொழில்‌ சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) அளிக்கப்பட உள்ளது என தாட்கோ மேலாண்மை இயக்குநர்‌ கந்தசாமி தெரிவித்துள்ளார்‌.

தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டு வசதி மற்றும்‌ மேம்பாட்டுக்கழகம்‌ (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின இனத்தைச்‌ சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன்‌ அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன்‌ அடிப்படையில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ இனத்தைச்‌ சார்ந்தவர்களுக்கு மருத்துவம்‌ தொழில்‌ சார்ந்த ஆங்கிலத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கத் தகுதி என்ன?

இதற்கான தகுதிகள்‌ ஆதிதிராவிடர்‌/ பழங்குடியினர்‌ இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்‌. இப்பயிற்சிக்கு பி.எஸ்‌.சி, எம்‌.எஸ்‌.சி நர்சிங்‌ பட்டப்‌ படிப்பு, போஸ்ட்‌ பேசிக்‌ பி.எஸ்‌.சி நர்சிங்‌ மற்றும்‌ பொது செவிலியர்‌ மருத்துவப்‌ படிப்பு ஆகிய படிப்புகளில்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

இப்பயிற்சியில்‌ பங்கு பெற 21 முதல்‌ 35 வயதிற்குள்‌ இருக்க வேண்டும்‌.

குடும்ப வருமானம்‌ ஆண்டிற்கு ரூ.3.00 லட்சத்திற்குள்‌ இருக்க வேண்டும்‌.

இப்பயிற்சிக்காக கால அளவு இரண்டு மாதமும்‌ விடுதியில்‌ தங்கி படிப்பதற்கான செலவினத்‌ தொகை தாட்கோவால்‌ அளிக்கப்படும்‌.

அயல் நாடுகளில் வேலைவாய்ப்பு

இப்பயிற்சி முடித்தவுடன்‌ தகுதியான நபர்களுக்கு, பயிற்சி அளிக்கும்‌ நிறுவனத்தின்‌ மூலமாக அயல்நாடுகளில்‌ வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்‌.

இப்பயிற்சியில்‌ சேருவதற்கு தாட்கோ இணையதளம் https://tahdco.com/ என்ற முகவரியில்‌ பதிவு செய்ய வேண்டும்‌ என தாட்கோ மேலாண்மை இயக்குநர்‌ கந்தசாமி தெரிவித்துள்ளார்.

கூடுதல் தகவல்களுக்கு: https://iei.tahdco.com/oet_reg.php

இ மெயில் முகவரி: tahdcoheadoffice@gmail.com

தொலைபேசி எண்கள்: 91 44 24310221