TN 10th Public Exam: 9.76 லட்சம் பேர் எழுதும் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடக்கம்.. தயார் நிலையில் ஏற்பாடுகள்..!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளது.  

Continues below advertisement

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று தொடங்கவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளது.  

Continues below advertisement

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடப்பு கல்வியாண்டு இறுதிப்பருவத்தை எட்டியுள்ள நிலையில் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.  இதனை மாணவ - மாணவிகள் ஆர்வமுடன் எழுதி வருகின்றனர். முன்னதாக 12 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 மாணவ-மாணவிகள் எழுதினர். இந்த தேர்வுகள் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

இதன்பின்னர் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கிய  11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று (ஏப்ரல் 5) ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனிடையே பெரிதும் எதிர்பார்க்கப்படும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 20 ஆம் தேதியுடன் நிறைவடையும் இந்த தேர்வுகளை தமிழ்நாட்டில்  4,66,765 மாணவர்களும், 4,55,960 மாணவிகளும் என மொத்தம் 9, 22, 725 பேர் எழுதுகின்றனர். இதேபோல் புதுச்சேரியில் 7,911 மாணவர்களும், மாணவிகள் 7,655 பேரும் என மொத்தம் 15, 566 பேர் எழுதுகின்றனர்.

அதேசமயம் தனித்தேர்வர்கள் பிரிவில் மாணவர்கள் 26,352 பேரும், மாணவிகள் 11, 441 பேரும், 5 திருநங்கைகள் என மொத்தம் 37,798 பேர் தேர்வு எழுதுகின்றனர். மேலும் 264  சிறைக்கைதிகள், மாற்றுத்திறனாளிகள் 13,151 பேரும் எழுதுகின்றனர். மொத்தமாக நடப்பாண்டு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,76,089 பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 4,025 மையங்களில் 12,639 தேர்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே 10 ஆம் வகுப்பு செய்முறை தேர்வில் அதிகளவில் மாணவர்கள் வராத நிலையில் அதற்காக கால நீட்டிப்பு செய்யப்பட்டது. அந்த மாதிரி ஆப்சென்ட் நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்கவும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க தேர்வு மையங்களை கண்காணிக்கும் படை, முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இயங்கும் பறக்கும் படை என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.

அதேபோல் வினாத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்லவும், விடைத்தாள் சேகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லவும் உரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்வு பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. 10 மணிக்கு புகைப்படம், பதிவெண்,  பாடம் முதலான விவரங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள்கள் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு அறையில் வழங்கப்படும். இவற்றை சரிபார்த்த பின் 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வுகள் தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை | 10th Exam Time Table 2022 Tamil Nadu

ஏப்ரல்  6 மொழித்தாள்
ஏப்ரல் 10 ஆங்கிலம்
ஏப்ரல் 13 கணிதம் 
ஏப்ரல் 15  விருப்ப மொழித்தாள்
ஏப்ரல் 17 அறிவியல்
ஏப்ரல் 20 சமூக அறிவியல் 
Continues below advertisement
Sponsored Links by Taboola