சிவகங்கை - முத்துப்பட்டியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையில், காலியாகவுள்ள இடங்களுக்கான நேரடி சேர்க்கை வருகின்ற 30.10.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தகவல் வெளியிட்டுள்ளார்.

 

ஐ.டி.ஐ.,யில் இருக்கும் துறைகள்

 

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தனது அறிக்கையில்” சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள FITTER, COPA (COMPUTER OPERATOR AND PROGRAMMING ASSISTANT), ADVANCED CNC MACHINING TECHNICIAN, INDUSTRIAL ROBOTICS & DIGITAL MANUFACTURING TECHNICIAN ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கையானது நேரடி சேர்க்கை மூலம் வருகின்ற 30.10.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட, தொழிற்பிரிவுகளில் சேர மாணவர்கள் கட்டாயம் SSLC (10ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். மேலும், நேரடி சேர்க்கைக்கு மாணவர்கள் சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு, மாணவர் சேர்கைக்கு விண்ணப்பிக்க வரும் போது தங்களது நிரந்தர தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப்பெண் சான்றிதழ் (10th), சாதி சான்றிதழ், மாற்று சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவைகளை உடன் எடுத்துச்செல்ல வேண்டும்.

 


 

வேலை வாய்ப்பு உதவிகள்

 

அதுமட்டுமன்றி, பயிற்சியின் போது பயிற்சியாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மாதம் ரூ.750/- இலவச பாடப்புத்தகங்கள். விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி. சீருடைகள், காலணிகள், இலவச பஸ்பாஸ், ஆகியவைகளும் வழங்கப்படும். மேலும், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பெண் பயிற்சியாளர்களுக்கு ரூ.1.000/- பெற்று வழங்க வழிவகை செய்யப்படும். பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சிகாலம் முடிவுற்றவுடன் பிரபல செய்துதரப்படும். மேலும், சேர்க்கை நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு தொடர்பான கூடுதல் விவரங் 99448 87754, 99654 80973, 97904 01672, 63854 75657, ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலா” என மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.