தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2021-22 ம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கை கலந்தாய்விற்கு கடந்த மாதம் 19 ம் தேதி முதல் ஜனவரி 7 ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் உட்பட மொத்தம் 37அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்குநரகம் கலந்தாய்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதேபோல், அகில இந்திய அளவில் 15 சதவீத இடங்களும் இந்த கலந்தாய்வின் மூலம் ஒதுக்கப்படுகிறது.


இந்த கலந்தாய்விற்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 மாணவர்களும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 மாணவர்கள் என மொத்தம் 40,288 போ் விண்ணப்பித்தனர். இதையடுத்து, மாணவர்களின் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு நேற்று தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 


இதில், அரசு, சுயநிதி மற்றும் 7.5 சதவீத அரசுப் பள்ளி உள் ஒதுக்கீடு தரவரிசைப் பட்டியலில்1,806 பேர் இடம் பிடித்துள்ளனர்.நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 710 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 23 வது இடமும், தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த நாமக்கல் மாணவி கீதாஞ்சலி முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்திலும் அதே மாவட்டத்தை சேர்ந்த பிரவீன், சென்னையை சேர்ந்த பிரசன் ஜித்தன் ஆகியோர் 710 மதிப்பெண்களுடன் தரவரிசையில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 


முதல் 10 இடங்களில் 3 மாணவிகளும், 7 மாணவர்களும்உள்ளனர். அதில் 9 மாணவர்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்தவர்கள் என்பதும், 10 வது இடத்தில் உள்ள மாணவர் மாநில பாடத்திட்டத்தை படித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தரவரிசைப் பட்டியலை இணையத்தில் காண : 


https://tnhealth.tn.gov.in/,https://tnmedicalselection.net/


கலந்தாய்வு : 


இளநிலை பட்டப்படிப்பு கலந்தாய்வு வருகிற ஜனவரி 27 ம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், அடுத்த 2நாட்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நேரடியாக நடைபெற இருக்கிறது.


அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான மொத்த இடங்கள் : 5175+2650 =7825.


மாநில மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான ஒதுக்கீடு மொத்த இடங்கள் : 4349+2650 = 6999. 


அதேபோல், அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு வருகிற ஜனவரி 30 ம் தேதி முதல் முறையாக ஆன்லைனில் பொது கலந்தாய்வு தொடங்குகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண