PG medical rank list: முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு

முதுநிலை மருத்துவ இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார்.

Continues below advertisement

முதுநிலை மருத்துவ இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். இதற்கு, நாளை முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

Continues below advertisement

முன்னதாக, 23 அரசு கல்லூரிகள்,16 தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  2,346 முதுநிலை மருத்துவ இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகின. இதை அடுத்து, முதுநிலை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. அனைத்து விண்ணப்பங்களும் சான்றிதழ்களும் பரிசீலனை செய்யப்பட்டு வந்தன. 

இந்த நிலையில் இன்று (செப். 28) அதற்கான தரவரிசை பட்டியலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

’’முதுநிலை மருத்துவ படிப்பிற்கான அரசுக் கல்லூரிகளில் 1,162 இடங்களும் நிர்வாக நிலை கல்லூரிகளில் 763 இடங்களும் காலியாக உள்ளன. 

அதேபோல முதுநிலை பல் மருத்துவத்திற்கான அரசுக் கல்லூரிகளில் 31  இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள 296 முதுநிலை பல் மருத்துவ இடங்கள்,   தேசிய வாரிய பட்டப்படிப்பு இடங்கள் 94 என மொத்தம் 2346 இடங்கள் உள்ளன. இந்த இடங்களானது 23 அரசு கல்லூரிகளிலும் 16 சுயநிதி கல்லூரிகளிலும் இருக்கின்றன.

முதுநிலை மருத்துவ மேற்படிப்பிற்கான விண்ணப்பங்கள்

அரசுக் கல்லூரி இடங்களில் சேர 6,968 பேர் விண்ணப்பித்ததில் 6,893 விண்ணப்பங்கள் தகுதியான விண்ணப்பங்களாகக் கண்டறியப்பட்டன. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 2,925 பேர் விண்ணப்பித்தனர். அதில் 2,286 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவையாக உள்ளன.

பல் மருத்துவ படிப்பிற்கு அரசு கல்லூரிகளில் 679 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 662 விண்ணப்பங்கள் தகுதியான விண்ணப்பங்கள் ஆகவும் நிர்வாக ஒதுக்கீட்டில் 341 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 310 விண்ணப்பங்கள் தகுதியானவையாகவும் உள்ளன. 

கலந்தாய்வு எப்போது?

இவை அனைத்திற்கும் ஆன்லைன் கலந்தாய்வானது இணையதளம் வாயிலாக நடைபெறும். இந்தக் கலந்தாய்வு நாளை முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை நடைபெறும். முதல் நாளான நாளை (செப்.29) மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறும்’’.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Quarterly Holidays : மாணவர்களுக்கு ஸ்வீட் நியூஸ்.. காலாண்டு தேர்வு விடுமுறை மீண்டும் நீட்டிப்பு.. எதுவரை? 

எஸ்.எஸ்.சி. தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு..இலவச பயிற்சி வகுப்புகள் உங்களுக்காக.. முழு விவரம் இதோ!

Continues below advertisement
Sponsored Links by Taboola