மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் கீழ் வெளியிடப்படும் என்ஐஆர்எப் 2023 பட்டியலில், இந்திய உயர் கல்வியில் சிறந்த கல்வி நிறுவனமாக தொடர்ந்து 5ஆவது முறையாக ஐஐடி சென்னை முதலிடத்தைப் பெற்றுள்ளது. 


ஆண்டுதோறும்  தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் (National Institutional Ranking Framework)  என்ஐஆர்எப் பட்டியல் என்ற பெயரில் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியல் இன்று காலை 11 மணிக்கு வெளியானது. இதில் தொடர்ந்து 5-வது முறையாக இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


2015 முதல் ஆண்டுதோறும் தேசியக் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகி வருகிறது. இதில் ஒவ்வொரு கல்வி நிறுவனமும் 5 முக்கியக் காரணிகளை வைத்து மதிப்பிடப்படுகிறது. அதாவது கற்பித்தல், கற்றல் மற்றும் அதற்கான வளங்கள் (Teaching Learning & Resources), ஆராய்ச்சி மற்றும் பயிற்சி (Research and Professional Practice), பட்டப்படிப்பு (Graduation Outcome), வெளிப்படுதல் மற்றும் உள்ளடக்கம் (Outreach & Inclusivity), கருத்து (Perception) ஆகிய 5 காரணிகள் தரவரிசைப் பட்டியலைத் தீர்மானிக்கின்றன.


அந்த வகையில் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 5-வது முறையாக இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தம் என்ற பிரிவிலும் பொறியியல் பிரிவிலும் ஐஐடி சென்னை 8ஆவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. ஐஐஎஸ்சி எனப்படும் இந்திய அறிவியல் கழகம் பெங்களூரு சிறந்த பல்கலைக்கழகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 


மேலாண்மைக் கல்வி நிறுவனம்


சிறந்த மேலாமாண்மைக் கல்வி நிறூவனமாக ஐஐஎம் அகமதாபாத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.