NCERT: பள்ளி பாடப்புத்தகங்களுக்கு இந்தியில் பெயர்; கிளம்பும் புது சர்ச்சை- நடந்தது என்ன?

6ஆம் வகுப்பு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளன. அதுவும் சந்தூர், மிருதங் ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

Continues below advertisement

என்சிஇஆர்டி-ன் கீழ் சிபிஎஸ்இ தனது பள்ளி பாட நூல்களுக்கு இந்தியில் பெயர் சூட்டி இருப்பது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பி உள்ளது.

Continues below advertisement

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் பாட நூல்களை என்சிஇஆர்டி உருவாக்கி வழங்கி வருகிறது. இதில் ஆங்கில வழிக் கல்வி பாடப் புத்தகங்களுக்கு இந்தியில் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. குறிப்பாக 6ஆம் வகுப்பு ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டுள்ளன. அதுவும் சந்தூர், மிருதங் ஆகிய பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன.

பூர்வி இந்தி பெயர்

முன்னதாக 6ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டத்துக்கு, Honeysuckle என்று பெயர் இருந்தது. தற்போது பூர்வி (Poorvi) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியில் கிழக்கு என்று அர்த்தம். மேலும் இது ஒரு பாரம்பரிய இசை ராகத்தின் பெயர் ஆகும்.

இந்திய இசைக் கருவிகளின் இந்தி பெயர்

அதேபோல 1 மற்றும் 2ஆம் வகுப்பு பாட நூல்களுக்கு மிருதங் ( Mridang ) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 3ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்துக்கு சந்தூர் ( Santoor ) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த இரு பெயர்களும் இந்திய இசைக் கருவிகளின் பெயர் ஆகும்.

அதேபோல 6ஆம் வகுப்பு கணித பாட நூலுக்கு கணித பிரகாஷ் (Ganita Prakash) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. எனினும் இதற்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மொழியியல் பன்முகத் தன்மையை நாசமாக்கும்

குறிப்பாக கேரள மாநிலக் கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி கூறும்போது, “என்சிஇஆர்டியின் முடிவு கூட்டாட்சித் தத்துவத்துக்கும் அரசமைப்பு நெறிமுறைகளுக்கும் எதிரானது. இது அடிப்படை அறிவுக்கு எதிரானது மட்டுமல்ல, நமது நாட்டின் மொழியியல் பன்முகத் தன்மையை நாசமாக்கும் வகையில் ஒருவரின் கலாச்சார விழுமியங்களை திணிக்கும் ஒரு சம்பவம்”  என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

புதிய கல்விக் கொள்கை 2020-ன்படி, என்சிஇஆர்டி புதிய பாடப் புத்தகங்களை 2023-ல் கொண்டு வரத் தொடங்கியுள்ளது. முதலில் 1 மற்றும் 2ஆம் வகுப்புக்கு புது பாட நூல்கள் வந்த நிலையில், 2024-ல் 3 மற்றும் 6ஆம் வகுப்புக்கு 2024-ல் பாட நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பாட நூல்கள் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola