சென்னையில்‌ உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையங்களும்‌ இணைந்து 24.01.2025 அன்று தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாம்‌ நடைபெற உள்ளது சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஐகடே தெரிவித்துள்ளார்‌.


சென்னையின் அனைத்து வேலைவாய்ப்பு மையங்களும் இணைந்து கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை (ஜன.24) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறது. இதில் 8ம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல், கலை மற்றும் அறிவியல், IT உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு படிப்பை முடித்தவர்கள் பங்கேற்கலாம்.


இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர்‌ கூறி உள்ளதாவது:


''தமிழ்‌நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌ நெறி வழிகாட்டும்‌ மையங்களிலும்‌, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார்‌ துறையில்‌ வேலைவாய்ப்புகள்‌ பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்‌ மூலம்‌ இளைஞர்கள்‌ அதிக அளவில்‌ தனியார்‌ துறையில்‌ பணி நியமனம்‌ பெற்று வருகின்றனர்‌.


சென்னையில்‌ உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையங்களும்‌ இணைந்து 24.01.2025 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.


எங்கே? எப்போது?


இந்த வேலைவாய்ப்பு முகாம்‌ சென்னை - 32 கிண்டி , ஆலந்தூர்‌ சாலையில்‌ உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில்‌ உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ காலை 10.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை நடைடுபற உள்ளது.


யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?


இம்முகாமில்‌ 8-ஆம்‌ வகுப்பு, 10-ஆம்‌ வகுப்பு, 12-ஆம்‌ வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, பொறியியல்‌, கலை, அறிவியல்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்ப பிரிவில்‌ ஏதாவது ஒரு பட்டம்‌ (டிகிரி, ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும்‌ கலந்து கொள்ளலாம்‌.


இம்முகாமில்‌ 20-க்கும்‌ மேற்பட்ட தனியார்‌ துறை நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு பணிக் காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்‌. இம்முகாம்‌ வாயிலாக பணி நியமனம்‌ பெறும்‌ இளைஞர்களின்‌ வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.


எந்தக் கட்டணமும் இல்லை


வேலையளிக்கும்‌ நிறுவனங்களும்‌, வேலைதேடும்‌ இளைஞர்களும்‌ இம்முகாமில்‌ கலந்துகொள்ள எந்தவித கட்டணமும்‌ செலுத்த தேவை இல்லை.


இம்முகாமில்‌ கலந்துகொள்ளும்‌ வேலை நாடுநர்கள்‌ மற்றும்‌ வேலையளிப்பவர்கள்‌ தங்கள்‌ விவரங்களை தமிழ்நாடு தனியார்‌ துறை வேலைவாய்ப்பு இணையதளத்தில்‌ www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணைப்பில் பதிவேற்றம்‌ செய்யவேண்டும்‌.


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்‌.