நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதிலேயே பல்வேறு மோசடிப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இம்முறை மாணவர் சேர்க்கையில் மோசடி நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

குறிப்பாக, போலி ஆவணங்​கள் மூலம் என்​ஆர்ஐ ஒதுக்​கீட்டு இடங்களில், வேறு மாணவர்​களை சேர்த்​திருப்​பது அமலாக்​கத் துறை விசா​ரணை​யில் கண்​டு​பிடிக்கப்பட்டுள்ளது.

மோசடி தெரிய வந்தது எப்படி?

இந்​தி​யா​ முழுவதும் உள்ள பல்வேறு தனி​யார் மருத்​து​வக் கல்​லூரி​களில் எம்பிபிஎஸ் படிப்​பில் சேரும் வெளிநாடு வாழ் இந்திய மாணவர்​களில் (என்​ஆர்ஐ) பலர் உண்​மை​யில் வெளிநாட்​டில் வசிக்கவில்லை என்று புகார்கள் எழுந்தன. குறிப்பாக பல்​வேறு வெளிநாடு​களில் உள்ள அதிகாரிகளும், அங்குள்ள இந்​திய தூதரக அதிகாரிகளுக்கும் இதுபற்றி, மத்​திய வெளியுறவுத் துறைக்குத் தகவல் அளித்தனர்.

இதையடுத்து மத்​திய வெளி​யுறவு அமைச்​சகம் சார்பில், அமலாக்​கத் துறை அதி​காரி​கள், மோசடி குறித்து தீவிர விசா​ரணையில் இறங்கினர். அதில் போலி ஆவணங்​கள் மூலம் சுமார் 18 ஆயிரம் மாணவர்கள், மோசடி செய்து என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்தது தெரிய வந்​தது.

மோசடி நடந்தது எப்படி?

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் ஒதுக்கீட்டு இடங்கள், வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் மூலம் மருத்துவ இடங்கள் நிரப்பப்படுகின்றன.

இந்த நிலையில், காலியாக உள்ள வெளிநாடு வாழ் இந்திய மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில், இந்தியாவிலேயே வசிக்கும் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். போலியான ஆவணங்கள், தூதரக சான்றிதழ்கள் ஆகியவற்றைச் சமர்ப்பித்துள்ளனர் என்பது அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

எந்த நடவடிக்கை​யும் எடுக்​க​வில்லை

இந்த நிலையில், இந்த மோசடி குறித்து தகவல் தெரிவித்தும் மேற்கு வங்க, ஒடிசா மாநில அரசு​கள் எந்த நடவடிக்கை​யும் எடுக்​க​வில்லை என்று அமலாக்கத் துறை தெரி​வித்​துள்​ளது.

இதையடுத்து அமலாக்கத்துறை, மேற்கு வங்​கத்​தில் உள்ள ஒரு தனி​யார் கல்லூரி வங்​கி​யில் வைத்​துள்ள வைப்புத் தொகை ரூ.6.42 கோடியை முடக்கியது. அதே​போல மேலும் சில தனி​யார் கல்​லூரி​களின்​ 10 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட தொகையையும் அமலாக்​கத்​ துறை ​முடக்​கி​யுள்​ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.