Just In

TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?

மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி

மயிலாடுதுறை மாணவர்களுக்கு அரசின் சூப்பர் சலுகைகள்! இலவச தங்குமிடம், உணவு, சீருடை மற்றும் பல!

ஜூன் 13 கடைசி நாள்...! அரசு உதவித்தொகை, வேலைவாய்ப்பு உறுதி! உடனே விண்ணப்பிங்க

இனி மாதம் ஒரு முறை... மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன மயிலாடுதுறை கலெக்டர் - என்ன தெரியுமா?
தொடங்கிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பம்; கட்டணம், தகுதி, வழிமுறைகள் என்னென்ன?
JEE Mains நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி; விண்ணப்பிப்பது எப்படி ?
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிறவகுப்பினர் மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) கலந்துகொள்ள பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது
Continues below advertisement

அகில இந்திய நுழைவுத் தேர்வு பயிற்சி
விழுப்புரம்: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிறவகுப்பினர் மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) கலந்துகொள்ள பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains)தேர்ச்சிபெற பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிறஇனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில் (JEE Mains) தேர்ச்சிபெற பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 65 சதவீதமும் மற்றும் பிறஇனத்தைச் சார்ந்த மாணவர்கள் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.4.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சியானது மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சிபெற தாட்கோ இணையதளத்தில் (www.tahdco.com) என்ற முகவரியில் பதிவு செய்யவும் மேலும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி பயிலவும் உணவு மற்றும் தங்கும் இடத்திற்குக்கான கட்டணத் தொகையும் 11 மாதங்களுக்கு தங்கி பயில பயிற்சிக்கான தொகையினை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும்,
மேலும் கடந்த ஆண்டில் 30 மாணவர்கள் தங்கி பயின்று அதில் 26 மாணவர்கள் தேர்ச்சி பெற்று IIT, NIT போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெற்றுள்ளார்கள் என விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
Continues below advertisement
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.