JEE Main 2024: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; வழிமுறைகள் இதோ!

இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது.

Continues below advertisement

2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி., ஐ.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. ஆகியவற்றில் வழங்கப்படும் படிப்புகளில் சேர ஜே.இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு 2 கட்டங்களாக, ஜேஇஇ மெயின் (முதல்நிலை), அட்வான்ஸ்டு (முதன்மைத் தேர்வு) என்று பிரித்து நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் இந்தத் தேர்வு நடத்தப்படும் நிலையில், நுழைவுத் தேர்வு தொடர்பான அறிவிப்பை தேசியத் தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டது. 

கால அவகாசம் நீட்டிப்பு

இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வுக்கு நவ. 2ஆம் தேதி முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கியது. மாணவர்கள் விண்ணப்பிக்க நவம்பர் 30ஆம் தேதி கடைசி என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்த நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்கள் டிசம்பர் 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம். 

விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 

* அதில் JEE Main 2024 registration என்ற பகுதியை க்ளிக் செய்ய வேண்டும். 

* அதில் தேவையான தகவல்களை உள்ளிட்டு, லாகின் செய்யவும். 

* அதில் விண்ணப்பப் பதிவை மேற்கொண்டு, தேவையான ஆவணங்களை உள்ளிட்டு பதிவேற்றம் செய்யவும். 

தேவையான ஆவணங்கள் என்னென்ன?

  • புகைப்படம் மற்றும் கையெழுத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட காப்பி
  • விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த இணைய பேங்க்கிங் வசதி
  • 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவர்கள், அனுமதிச் சீட்டு நகலைக் காண்பிக்கலாம்)
  • சாதிச் சான்றிதழ்

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

ஆண்கள் பிரிவில் ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு- இந்திய மையங்களில் எழுத – ரூ. 1000, இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு – ரூ. 5000

பெண்கள் பிரிவில் ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு- இந்திய மையங்களில் எழுத – ரூ. 800, இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு – ரூ. 4000

எஸ்சி, எஸ்டி, மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள் ஆகிய பிரிவினருக்கு- இந்திய மையங்களில் எழுத – ரூ. 500, இந்தியாவுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு – ரூ. 2500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

12 மொழிகளில் தேர்வு எழுதலாம்

JEE Main நுழைவுத் தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய 12 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மொழிகள் தாண்டி பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதி செய்யப்பட்டுள்ளது. 

கூடுதல் விவரங்களுக்கு: https://jeemain.nta.nic.in/

Continues below advertisement
Sponsored Links by Taboola