எம்பிஏ எனப்படும் நிர்வாக மேலாண்மை படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. 

Continues below advertisement

இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனமான ஐஐடி சென்னையின் மேலாண்மைப் படிப்புகள் துறை (DoMS), தனது இரண்டு ஆண்டு முழுநேர எம்பிஏ படிப்பிற்கான விண்ணப்பத் தேதியை நீட்டித்துள்ளது. குறிப்பாக பிப்ரவரி 8 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதற்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

கல்வித் தகுதி மற்றும் சேர்க்கை முறை

Continues below advertisement

  • விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இதுவே SC/ ST/ PwD பிரிவினருக்கு 55% ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
  • கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். எனினும் இவர்கள் செப்டம்பர் 30, 2026-க்குள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • இந்திய மாணவர்கள் CAT 2025 மதிப்பெண் அடிப்படையிலும், வெளிநாட்டு மாணவர்கள் GMAT மதிப்பெண் அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

பாடத்திட்டம் என்ன?

நிதி, சந்தைப்படுத்தல், மனித வளம் மற்றும் தகவல் அமைப்புகள் போன்ற முக்கிய துறைகளில் நிபுணத்துவம் பெறும் வகையில் 7 காலாண்டுகளாகப் பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்துப் பேசிய துறைத் தலைவர் சாஜி மேத்யூ, இந்தத் திட்டம் கல்வி, பிராந்தியம் மற்றும் பாலின பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதாகத் தெரிவித்தார்.

நேர்முகத் தேர்வு

இந்தப் படிப்புக்கான மும்பை, டெல்லி, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் 2026 மார்ச் மாதம் நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். குறிப்பாகச் சென்னையில் மார்ச் 20 முதல் 22 வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே மாதம் அறிவிக்கப்பட்டு, ஜூலை மாதம் வகுப்புகள் தொடங்கும் என்று ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://doms.iitm.ac.in/domsmba/ என்ற இணையதளம் மூலம் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

100% வேலைவாய்ப்பு

ஐஐடி சென்னை எம்பிஏ திட்டமானது 100% வேலைவாய்ப்பை வழங்கி சாதனை படைத்துள்ளது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.35.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. புதிய பட்டதாரிகள் மற்றும் பணி அனுபவம் வாய்ந்தவர்கள் என இரு தரப்பினரும் இந்தப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.