GATE 2025: பொறியியல் கேட் தேர்வு எழுதுபவர்களா?- இதைச் செய்ய இன்றே கடைசி!

GATE 2025 ட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்றே கடைசித் தேதி ஆகும். எனினும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் நவ.22 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். 

Continues below advertisement

2025ஆம் ஆண்டுக்கான பொறியியல் கேட் தேர்வை எழுதும் தேர்வர்கள், விண்ணப்பங்களில் திருத்தத்தைச் செய்ய இன்றே கடைசி (நவ.20) ஆகும்.

Continues below advertisement

2025ஆம் ஆண்டுக்கான முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர நடத்தப்படும் கேட் (Graduate Aptitude Test in Engineering) தேர்வை ஐஐடி ரூர்க்கி நடத்துகிறது. பொறியியல் கேட் தேர்வு பிப்ரவரி 1, 2, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.  இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் படிக்க முடியும்.  

ஆண்டுதோறும் நடைபெறும் GATE தேர்வை, ஐஐடி கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஐஐஎஸ்சி எனப்படும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனமோ நடத்தும் நிலையில், 2025ஆம் ஆண்டு தேர்வை ஐஐடி ரூர்க்கி நடத்த உள்ளது. கணினி மூலம் நடைபெற உள்ள 2025 கேட் தேர்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். உள்ளிட்ட பொறியியல் மேற்படிப்புகளில் சேரவும் பொறியியல், தொழில்நுட்பம் கட்டுமானம், அறிவியல் மற்றும் மானுடவியல் சார்ந்த முதுநிலை படிப்புகளுக்கும் முனைவர்கள் படிப்புகளில் சேருவதற்கும் கேட் தேர்வு மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன. தனியார் கல்வி நிறுவனங்களும் கேட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

வேலைவாய்ப்புக்கும் கேட் தேர்வு

அதேபோல பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் (PSUs) கேட் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்களை வேலையில் சேர்க்கின்றன. 

கணினி முறையில், 3 மணி நேரத்துக்கு 30 தாள்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்வர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில், தாள்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். தினந்தோறும் இரண்டு அமர்வுகளாக கேட் தேர்வு நடைபெறும். குறிப்பாக காலை 9.30 முதல் 12.30 மணி வரையிலும் மதியம் 2.30 முதல் 5.30 வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது.

கேட் தேர்வு விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் உண்டு. 1 மதிப்பெண் எம்சிக்யூவின் தவறான விடைக்கு 1/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும். 2 மதிப்பெண் எம்சிக்யூவின் தவறான விடைக்கு 2/3 மதிப்பெண்கள் கழித்துக் கொள்ளப்படும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுகளுக்கு இந்த மதிப்பெண்கள் செல்லுபடி ஆகும்.

இந்த நிலையில் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்றே கடைசித் தேதி ஆகும். எனினும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் நவ.22 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். 

தேர்வு குறித்த சந்தேகங்களைத் தீர்க்க https://gate2025.iitr.ac.in/faqs.html என்ற இணைப்பை க்ளிக் செய்து காண வேண்டியது முக்கியம்.

கூடுதல் விவரங்களை https://gate2025.iitr.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம்.   

Continues below advertisement
Sponsored Links by Taboola