2022ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 22 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் 2022ஆம் ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க / அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் ஜூலை 19 ஆக இருந்தது. எனினும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகத் தாமதமாகின. இதனால், விண்ணப்பிக்கக் கடைசித் தேதி கால அவகாசம் இல்லாமல் நீட்டிக்கப்பட்டது. 


இதற்கிடையே ஜூலை 22ஆம் தேதி சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் இருந்து 5 நாட்களுக்கு, அதாவது ஜூலை 27 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் ஜூலை 27 வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர். 


சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறை


இதற்கிடையே சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானதால், பொறியியல் கலந்தாய்வுத் தேதிகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்ட் 1ஆம் தேதி டிஎஃப்சி மையங்களில் தொடங்கியது. 


முதற்கட்டமாக விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் 2,442 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புகளில் சேர விண்ணப்பித்த விளையாட்டு வீரர்கள் யாரேனும், இதுவரை நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காவிட்டால் ஆகஸ்ட் 12ஆம் தேதி மீண்டும் பங்கேற்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் தெரிவித்துள்ளது.


விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் பதிவுசெய்துள்ள மாணவர்கள் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரடியாகச் செல்ல வேண்டும். அப்போது அனைத்து அசல் விளையாட்டுச் சான்றிதழ்களையும் ஆகஸ்ட் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணிக்குள் எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் 22 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


கலந்தாய்வுக்கு ஒட்டுமொத்தமாக 1.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் 22,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் 5,000 பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்


மாணவர்கள் கூடுதல் விவரங்களுக்கு tneaonline.org என்ற இணையத்தை க்ளிக் செய்து பார்க்கலாம். 


*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண