CUET PG 2023: முதுகலை பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு; விவரம் இதோ..

முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு (CUET - PG) விண்ணப்பிக்க ஏப்ரல் 19 வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் முதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு (CUET - PG) விண்ணப்பிக்க ஏப்ரல் 19 வரை அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்கள் மே 5ஆம் தேதி இரவு 9.50 வரை விண்ணப்பிக்கலாம்.

Continues below advertisement

முன்னதாக, மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் இளங்கலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டது. அதே நேரத்தில் மாநில அரசின் கீழ் செயல்படும்  பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் விரும்பினால் க்யூட் நுழைவுத் தேர்வைப் பின்பற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ஆகஸ்ட் 1 முதல் புதிய கல்வியாண்டு

இந்த சூழலில்,மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில்  2023-24ஆம் கல்வி ஆண்டுக்கானமுதுகலை கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (CUET) ஜூன் மாதம் 1 முதல் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியாக உள்ளன. ஆகஸ்ட் 1 முதல் புதிய கல்வியாண்டைத் தொடங்கலாம் என்று பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பப் பதிவு மும்முரம்

இதற்கான விண்ணப்பப் பதிவு மார்ச் 19ஆம் தேதி தொடங்கி, மும்முரமாக நடைபெற்றது. ஏப்ரல் 19 வரை இதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாணவர்கள் மே 5ஆம் தேதி இரவு 9.50 வரை cuet.nta.nic.in என்ற இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கணினி முறையில் சுமார் 20 பாடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட13 மொழிகளில் இந்தத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்த உள்ளது. நாடு முழுவதும் 547 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 13 நகரங்களிலும் க்யூட் தேர்வுக்காகத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

* தேர்வர்கள் cuet.nta.nic.in என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். 

* CUET registration link என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

* பெயர், இ-மெயில் முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட தகவல்களை உள்ளிடவும். 

* பதிவு செய்ததும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி லாகின் செய்யவும். 

* விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும். 

* விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, சமர்ப்பிக்கவும். 

மே 6 முதல் 8ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் என்டிஏ தெரிவித்துள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு: https://cdnbbsr.s3waas.gov.in/s3d1a21da7bca4abff8b0b61b87597de73/uploads/2023/04/2023041911.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும். 

தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பின்படி இதுவரை 142 பல்கலைக்கழகங்கள் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கையை நடத்தப் பதிவு செய்துள்ளன. எனினும் இளங்கலைப் படிப்புகளுக்குப் போல, முதுகலைப் படிப்புகளுக்கு க்யூ நுழைவுத் தேர்வு இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola