Cuddalore Office Recruitment 2021 : கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வேண்டுமா? ...உடனே அப்ளை பண்ணுங்க..!

தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 8-ஆம் தேதி கடைசி நாளாகும். 

Continues below advertisement

பணியின் பெயர்: chair person, members

காலிப்பணியிடங்கள்: பல்வேறு உள்ளன

விண்ணப்பிக்கும் முறை: offline

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு

கல்வித் தகுதி: chair person, members - degree in psychology/ psychiatry/ law/ social work/ sociology/ human development

வயது வரம்பு: விண்ணப்பதார்கள் 35 வயதில் இருந்து 65 வயது வரை இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08-08-2021

விண்ணப்பக் கட்டணம்: இலவசம், கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
எண் 312,317,2வது தளம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் - 607 001


மேலும் விவரங்களுக்கு: https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2021/07/2021072355.pdf

 


இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: -

2015 ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு)
சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு
தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள
தகுதிகளைக்கொண்ட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்
படுகின்றன. குழந்தைகள் நலக்குழுவிற்கு 2 உறுப்பினர்கள் மதிப்பூதிய அடிப்படையில்
நியமிக்கப்பட உள்ளனர்.

குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்கைளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவர் அல்லது குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம் அல்லது சட்டம் அல்லது சமூக பணி அல்லது சமூகவியல் அல்லது மனித மேம்பாடு ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்ற தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு
குறையாதவராகவும், 65 வயதை பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். குழந்தைகள் நலக்குழுவில் அதிகபட்சமாக ஒரு நபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவர்களாவர், ஆனால் தொடர்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

தகுதி வாய்ந்த நபர்கள் மேற்கண்ட பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் (செய்தி வெளிவந்த நாளிலில் இருந்து 15 நாட்கள் வரை) கீழ்கண்ட முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
எண் 312, 317, 2-வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
கடலூர் 607 001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேற்குறிப்பிட்ட அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என மாவட்ட ஆட்சியர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement