அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம்.(IITM) திட்டத்தின்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறை பெட்டகங்களை வழங்க உள்ளார்.

  


அனைவருக்கும்‌ ஐஐடிஎம் திட்டத்தில்‌  தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின், சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள டி.டி.ஜெகன்னாதன்‌ அரங்கத்தில் இன்று ( 05.04.2023) மாலை 5:30 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், பங்கேற்க உள்ளார்‌.


1 லட்சம்‌ மாணவர்களுக்குக் கற்பித்தல்


சென்னை ஐஐடி வாயிலாக 250 அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளைச்‌ சேர்ந்த 500 அறிவியல்‌ ஆசிரியர்களுக்குப்‌ பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்கள்‌ வாயிலாக 1 லட்சம்‌ மாணவர்களுக்குக் கற்பித்தல் கடத்தப்படும். இதற்குப் பயன்‌ தரும்‌ வகையில்‌ மின்னணு செய்முறைப் பெட்டகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனை சம்பந்தப்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின் வழங்க உள்ளார்.


இந்த நிகழ்ச்சியில்‌, பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி, சென்னை ஐஐடியின்‌ இயக்குநர்‌ முனைவர்‌ வீ.காமகோடி, பள்ளிக்‌ கல்வித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ காகர்லா உஷா இ.ஆ.ப., ஐஐடி பேராசிரியர்கள்‌, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள்‌, மாணவர்கள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொள்ள உள்ளனர்‌.