பாங்க் ஆப் பரோடாவில் காலியாக உள்ள உள்ள Financial Literacy & Credit Counselors பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ள  நிலையில், உடனடியாக அனைவரும் இதனைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


இந்தியாவில் பரோடாவினை மையமாகக்கொண்டு செயல்பட்டுவரும் பொதுத்துறை வங்கிதான் பாங்க் ஆப் பரோடோ( Bank of Baroda). தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் 3082 கிளைகளுடன் இயங்கி வருகிறது. தற்போது இந்த வங்கியில் காலியாக உள்ள Financial Literacy & Credit Counselors பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் graduation பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும் agriculture, veterinary science, sociology, psychology, and social work ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதோடு இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் தேசிய, ஊரக அல்லது தனியார் வங்கிகளில் குறைந்தது 5 ஆண்டுகள் வரையாவது பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும் எனவும் இந்த வேலைவாய்ப்பு  அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




எனவே மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 20 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வங்கிப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ள நிலையில்,  https://www.bankofbaroda.in/writereaddata/Images/pdf/Detailed-Advertisement-20-8-2021.pdf இந்த பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை டவுன்லோடு செய்து அதில் கேட்கப்பட்டுள்ள பெயர், பிறந்த தேதி, பணி அனுபவம், கல்வி விவரங்கள், போன்றவற்றை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். இதனையடுத்து பூர்த்தி செய்ய விண்ணப்பத்தினை The Regional Manager, Bank of Baroda, Durg Regional Office,  First Floor Zonal Market Sector 10, Bhilai (Chhattisgarh)-490006 என்ற முகவரிக்கு வருகின்ற நாளைக்கு உடனடியாக அஞ்சல் அல்லது கொரியர் மூலமாக அனுப்பி வைத்துக்கொள்ளுங்கள்.




இதனையடுத்து இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் தகுதி மற்றும் முன் அனுபவம் ஆகியவற்றினை வைத்து பாங்க் ஆப் பரோடாவில் Financial Literacy & Credit பதவிக்கான நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கான தேதி மெயில் மற்றும் அஞ்சல் மூலமாக விண்ணப்பத்தாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நேர்காணல் தேர்வில் வங்கி தொடர்பான கேள்விகள், முன் அனுபவம், மக்களுடன் உரையாடும் திறன் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து விண்ணப்பத்தாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அனைத்து தேர்வுகளும் முடிந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் மற்றும் ரூ. 5 ஆயிரம் conveyance expenses வழங்கப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.