பி.எட் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பி.எட் படிப்புகளில் சேர விரும்புவோர் உடனே விண்ணப்பிக்கவும்.


வழிகாட்டு நெறிமுறைகள்:


பி.எட். படிப்புகளில் அனைத்து வகை கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் பி.எட். படிப்புகளில் சேர்வது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதையடுத்து பி.எட் படிப்புகளில் சேர்வதற்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடைசி நாள்: அக்டோபர் -3


பி.எட் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை, இன்று 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாக அக்டோபர் 3-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கவுன்சிலிங் நடைபெறும் நாளாக அக்டோபர் 12ம் தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இட ஒதுக்கீடு:


அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பி.எட். மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்களை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 


இதுகுறித்து உயர் கல்வித்துறை சார்பில் கல்லூரிக் கல்வி இயக்குநர் ஈஸ்வர மூர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:


’’அனைத்து வகைக் கல்லூரிகளிலும் பி.எட். மாணவர் சேர்க்கையில் 69% இட ஒதுக்கீடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இணையதளம் வாயிலாகவே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்.


பி.எட். படிப்பில் சேர விரும்பும் 50 % மதிப்பெண்களை இளங்கலைப் படிப்புகளில் பெற்றிருக்க வேண்டும். எனினும் வகுப்பு வாரியாகத் தளர்வு அளிக்கப்படுகிறது. எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 40 சதவீதமும் எம்பிசி பிரிவினருக்கு 43 சதவீதமும் பிசி பிரிவினருக்கு 45% மதிப்பெண்களும் பெற்றிருந்தால் போதும். 


மேலும் பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள TNGASABEd 2022 (tngasaedu.in) என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


விண்ணப்பங்கள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள Home | DCE (tngasa.in) இந்த லிங்கை செய்யவும்.


Also Read: Higher Education: பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றம்: உயர் கல்வித்துறை