சென்னையில் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் நாளை செயல்பட வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


மாண்டல் புயல் காரணமாக டிசம்பர் 9ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடுகட்ட இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வெள்ளிக்‌ கிழமை பாடவேளையைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''மாண்டஸ்‌ புயல்‌ மழையின்‌ காரணமாக 09.12.2022 அன்று சென்னை மாவட்டத்தில்‌ செயல்பட்டு வரும்‌ அனைத்து வகைப்‌ பள்ளிகளுக்கும்‌ உள்ளூர்‌ விடுமுறை அறிவிக்கப்பட்டது.


அப்பணி நாளினை ஈடு செய்திடும்‌ பொருட்டு, 17.12.2022 அன்று (சனிக்‌ கிழமை) சென்னை மாவட்டத்தில்‌ செயல்பட்டு வரும்‌ அனைத்து வகை உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளும்‌ வெள்ளிக்‌ கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு வேலை நாளாக கருதி செயல்படவேண்டும்‌ என அறிவிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாண்டஸ் புயலுக்காக அறிவிக்கப்பட்ட விடுமுறை


மாண்டஸ் புயல்க்காலில் இருந்து 270 கி.மீ. கிழக்கு- தென் கிழக்கே மற்றும் சுமார் 350 கி.மீ. தெற்கே- சென்னைக்கு தென் கிழக்கே நிலை கொண்டுள்ளது. 


இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை,விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாமக்கல், கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சேலம், நாகை, திருவண்ணாமலை, திருச்சி, தருமபுரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் தேனி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டது.


மேலும் புதுச்சேரி - காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.




அதைத் தொடர்ந்து மாண்டஸ் புயலானது, மேற்கு- வடமேற்கு திசையைக் கடந்து, வட தமிழ்நாடு- புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் ஆந்திர பிரதேச கடற்கரைகளுக்கு இடையே புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டா மாகாணத்திற்கு இடையே கரையை கடக்கக் கூடும் என ஏற்கெனவே வானிலை மையம் தெரிவித்த நிலையில், மாமல்லபுரம் அருகே மாண்டஸ் புயல் கரையைக் கடந்தது.


இதுவரை 13 புயல்


கடந்த 121 ஆண்டுகளில் சென்னை- புதுச்சேரி இடையே  12 புயல்கள் கரையைக் கடந்தன. மாண்டஸ் புயல் கரையைக் கடந்த 13வது புயல் என சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் சென்னையில் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் நாளை செயல்பட வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


மாண்டல் புயல் காரணமாக டிசம்பர் 9ஆம் தேதி விடுமுறை விடப்பட்டதை ஈடுகட்ட இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வெள்ளிக்‌ கிழமை பாடவேளையைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.