பெற்றோர்களைக் கொண்டாடுவோம்‌ மாநாடு குறித்தும் பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர் அன்பில் மகேஸிடம், தமிழக ஆசிரியர் கூட்டணி சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளது.


இதுகுறித்து தமிழக ஆசிரியா்கூட்டணி அகில இந்தியச்செயலாளர்அண்ணாமலை, அமைச்சர் அன்பில் மகேஸுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:


’’இந்திய அரசின்வரலாற்றில்முதன்முறையாக பெற்றோர்களை கொண்டாடுவோம்நிகழ்ச்சி - 7 மண்டலங்களில்‌ 7 கட்டமாக நடக்கிறது. ஆனால் கூட்டத்தின்நோக்கத்தினை வெளிப்படைத்தன்மையுடன்பகிர்ந்து கொள்ளவில்லை.


முதற்கட்ட நிகழ்ச்சியில்ஜனவரி 29-ல்மதுரையில்நடைபெறும்‌, திண்டுக்கல்‌, மதுரை, இராமநாதபுரம்‌, சிவகங்கை, தேனி, விருதுநகர்மாவட்டங்களில்உள்ள அரசு மற்றும்தனியார்பள்ளிகளின்ஒரு பள்ளிக்கு 4 பெற்றோர்கள்‌, ஒரு தலைமை ஆசிரியர்‌, ஒரு ஆசிரியர்என 30 ஆயிரம்பேர்கலந்துகொள்ள இருக்கிறார்கள்‌. அதற்கான ஏற்பாடுகள்தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தமிழ்நாடு இளைஞர்நலன்மற்றும்விளையாட்டுத்துறை, செயலாக்கத்துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின்மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார்‌. அமைச்சர்கள்பி.டி.பழனிவேல்ராஜனும், மூர்த்தியும்பள்ளிக் கல்வித்துறை செயலாளரும் அனைத்து இயக்குநர்களும்பங்கேற்கிறார்கள்‌.


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அன்பில்மகேஸ்பொய்யாமொழி விழாவிற்கு தலைமை வகித்து நடத்துகிறார்‌. இந்த மாநாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்என்று எதிர்பார்க்கிறோம்‌.


30 ஆயிரம்பேருக்கு உணவு மற்றும்பயணச்செலவினை ஏற்றுக்கொள்வது யார்‌?


அழைத்து வருபவர்கள்‌ - ஆசிரியர்கள்‌. ஆசிரியர்கள்வேண்டுமானால்அவர்கள்சொந்த செலவில்வருவார்கள்‌. பெற்றோர்களுக்கு பயணச்செலவு?


இரண்டு நாள்அவர்களின்வாழ்வாதாரத்திற்கு ஈடுகட்டுவது யார்‌?


கூட்டத்தின்நோக்கமென்ன ?


 ஆசிரியர்கள்கோரிக்கைகளை எதையும்செய்ய முன்வராத பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு -


கூட்டத்தை அழைத்து வருபவர்கள்ஆசிரியர்களாம்‌ ! கூட்டத்தை சேர்த்து தருபவர்கள்ஆசிரியர்களா?


 ஆசிரியர்கள்மீது நம்பிக்கை இழந்து - ஆசிரியர்சங்கங்களை அலட்சியப்படுத்திக்கொண்டுஆசிரியர் மனசு திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர்என்ற புது பதவியினை உருவாக்கி திருச்சி மாநகரில்அலுவலகம்தந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்‌‌ செயல்பட்டுவரத்தொடங்கியதற்குப்பிறகு அமைச்சர்மீதுள்ள நம்பிக்கை உணர்வினை ஆசிரியர்சங்கங்கள்இழந்துவிட்டார்கள்‌.


60 ஆண்டுகாலம்ஒன்றிய அளவில்தொடக்கக்கல்வி ஆசிரியாகளின்முன்னுரிமைப்பட்டியல்கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறையினை மாற்றி மாநில அளவில்தொடக்கக்கல்வி ஆசிரியர்களின்முன்னுரிமையினை மாற்றியமைத்து அரசாணை எண்‌. 243, 21.12.2023ல்பிறப்பிக்கப்பட்டதன்அவசரம்தான்என்ன ?


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அழுத்தத்தால்தான்அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அரசிதழில்வெளியிடப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியுமா? கருத்து கேட்கும்குழுவினை அமைத்த பள்ளிக் கல்வித்துறை தொடக்கக்கல்வி ஆசிரியா்இயக்கங்களை அழைத்து கருத்து கேட்காதது ஏன்‌ ?


60 ஆயிரம்இடைநிலை ஆசிரியர்கள்பட்டதாரி ஆசிரியராக நேரடி நியமனம்செய்யப்படும்வாய்ப்பு பறிக்கப்பட்டு இருப்பது ஏன்‌ ?


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்டிட்டோஜாக்உயர்மட்டக்குழு உறுப்பினர்களிடம்‌ 12.10.2023 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில்‌ 12 கோரிக்கைகளுக்கு அரசாணை பிறப்பிப்பதாக ஒப்புதல்அளிக்கப்பட்ட கோரிக்கைகளில்ஒன்றுகூட அரசாணையாக வெளிவரவில்லை.


 27.01.2024 அன்று மாவட்டத்தலைநகர்களில்உண்ணாவிரத அறப்போராட்டம்நடத்துகிறார்கள்‌.


ஆசிரியர்சங்கங்கள்தொடர்ந்து களத்தில்இறங்கி போராடி வருகிற காலம்தாங்கள்பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக உள்ள காலத்தில்தான்என்பதை மறுக்க முடியுமா?


சுய விளம்பரத்திற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்பதவியினை பயன்படுத்துவதிலிருந்து ஒருநாள்ஒதுக்கி ஆசிரியர்களின்கோரிக்கைகள்மீது கவனம்செலுத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்வாருங்கள்’’‌.


இவ்வாறு தமிழக ஆசிரியா்கூட்டணி அகில இந்தியச்செயலாளர்அண்ணாமலை தெரிவித்துள்ளார்.