விழுப்புரம்: கடலூரில் இருந்து பைக்கில் மரக்காணத்திற்க்கு கடத்தி செல்லப்பட்ட 46 அரியவகை ஆமை பறிமுதல் செய்யப்பட்டது.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், கடலூரில் இருந்து பைக்கில் மரக்காணம் கடத்திச் செல்லப்பட்ட அரிய வகை ஆமைகளை பறிமுதல் செய்த போலீசார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோட்டகுப்பம் அடுத்த கீழ் புத்துப்பட்டு சோதனை சாவடியில் இன்று காலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை நிறுத்தி சோதனை செய்ததில், சாக்குப் பைகளில் அரிய வகை ஆமைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கடலூர் அடுத்த வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் நாகையன்(24), ஆறுமுகம் மகன் கார்த்திக்(24), என்பதும், இவர்கள் கழிவுநீர் ஊர்தி வாகனத்தில் கூலி வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.


இதனையடுத்து திண்டிவனம் வனத்துறை அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அலுவலர்கள் ஆமை கடத்திய இளைஞர்கள், பைக் மற்றும் 46 ஆமைகளை பறிமுதல் செய்து திண்டிவனம் வனசரக அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். பின்னர் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், கழிவு நீர் ஊர்தி வாகனத்தில் வேலை செய்து வருவதாகவும், கோட்டகுப்பம், புதுச்சேரி முத்தியால்பேட்டை, மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள கால்வாய்களில் கறிக்காக அவ்வப்போது ஆமைகளை பிடித்து செல்வதும் தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறை அதிகாரிகள் மேலும் அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மரக்காணம் அருகே கறிக்காக ஆமைகளை கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சனைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.