விழுப்புரம் : திண்டிவனம் அருகே திருவிழாவிற்காக உறவினரின்  வீட்டுக்கு சென்ற வாலிபருக்கு அரிவாள்  வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (23). இவர் இவரது ஊருக்கு அருகில் உள்ள நொளம்பூர் கிராமத்தில் உள்ள அவரது உறவினர் செந்தில் என்பவரது வீட்டுக்கு அங்கு நடைபெற்று வரும் திருவிழாவிற்காக சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு பிரேம்குமார் அங்கு நடந்த தெருக்கூத்தை பார்த்துவிட்டு அருகில் உள்ள குளக்கரையில் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது .


அப்போது அங்கு வந்த மர்ம நபர்  பிரேம்குமாரை உறக்கத்திலிருந்து எழுப்பி அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது கை மற்றும் கால் பகுதிகளில் பலமாக வெட்டி உள்ளனர். அப்போது பிரேம்குமாரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேம் குமாருக்கு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.


இதுகுறித்து தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஒலக்கூர்  போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இந்த கத்திவிட்டு சம்பவம் முன் விரோதம் காரணமாக நடந்ததா? அல்லது ஏதேனும் தொழில் போட்டியில் நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள். திண்டிவனம் அருகே உறவினர் வீட்டு திருவிழா நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபருக்கு கத்தி வெட்டு விழுந்த  சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் போலீசார் விசாரணையில் ஈச்சேரி பகுதியை சேர்ந்த அருள் என்பவர்  பிரேம் குமாரையை அரிவாளால் வெட்டியது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் அருளை வலை வீசி தேடி வருகின்றனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண