திண்டிவனத்தில் பரபரப்பு... மான்கறி விற்பனையால் அதிர்ச்சி...வனத்துறையினரை கண்டவுடன் ஓட்டம் பிடித்த மக்கள்..

திருவண்ணாமலையிலிருந்து மானை வாங்கி அதை அங்கேயே வெட்டி அதை இரு சக்கர வாகனத்தில் கடத்தி வந்து திண்டிவனம் பகுதியில் பல நாட்களாக விற்பனை செய்துள்ளார்.

Continues below advertisement

விழுப்புரம்: திண்டிவனத்தில் மான்கறி விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். 

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நத்தைமேடு பகுதியில் பொதுமக்களுக்கு மான் கறி விற்பனை செய்த ஒருவர் கைதானார். மேலும், ஏழு கிலோ மான் கறி பறிமுதல் செய்த நிலையில், வனத்துறை அதிகாரிகளை கண்டவுடன் மான் கறி வாங்க வந்தவர்கள் தப்பி ஓடினர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நத்தைமேடு பகுதியில் மான் கறி விற்பனை நடைபெறுவதாக மாவட்ட வன அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து திண்டிவனம் வனசரக அலுவலர்  புவனேஷ் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக அந்தப் பகுதியில் சோதனை செய்தனர். அப்பொழுது வனத்துறை அதிகாரிகளை கண்டவுடன் மான் கறி வாங்க வந்தவர்களும் விற்பனை செய்த நபரும் தப்ப ஓட முயன்றனர். அப்போது, விற்பனை செய்த நபரை மடக்கி பிடித்த வனத்துறை அதிகாரிகள், அவரை வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தனர். விசாரித்ததில் அவர் நத்தமேடு பகுதியை சேர்ந்த அஜித் என்பதும், இவர் திருவண்ணாமலையிலிருந்து மானை வாங்கி அதை அங்கேயே வெட்டி அதை இரு சக்கர வாகனத்தில் கடத்தி வந்து திண்டிவனம் பகுதியில் பல நாட்களாக விற்பனை செய்தது  தெரிய வந்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அவரை வன பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில்  அஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

Continues below advertisement
Sponsored Links by Taboola