செஞ்சி அருகே பெற்ற குழந்தையை கொடுமைப்படுத்திய தாய் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மணலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் வடிவழகன். இவருக்கும் 2016 ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்த துளசி என்ற பெண்ணுக்கும் திருமணம் செய்யப்பட்டது. இந்நிலையில் 3 வருடமாக சென்னை தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.


Farm Bill : முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட தீர்மானம்..வெளிநடப்பு செய்த பாஜக!


இந்தநிலையில் 2019 காலகட்டத்தில் இவர்கள் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூர் கிராமத்திற்கு குடி வந்தனர். சில நாட்களாக வேறு ஒருவரிடம் தொடர்ந்து தொலைபேசியில் துளசி பேசி வருவதாக கூறபடுகிறது. இதனால் கணவர் வடிவழகன் மனைவி துளசியிடம் சண்டையிட்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.




பிரதீப் என்கிற ஒன்றரை வயது குழந்தை மற்றும் கோகுல் என்ற 3 வயது ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் ஒன்றரை வயதான குழந்தை பிரதீப்பை துளசி கொடுமைப்படுத்தி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் மணலப்பாடி கிராமத்தில் விசாரிக்கச் சென்றபோது இது சம்பவம் மூன்று மாதத்திற்கு முன்னதாக நடந்ததாகும், அவள் மேல் சந்தேகம் ஏற்பட்டு கேள்வி கேட்டதால், அவருடைய தாய் வீட்டுக்குக் கொண்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தனர். பின்பு அவருடைய செல்போன் வீட்டில் இருந்த நிலையில் அதை எடுத்துப் பார்க்கும்போது அதிலுள்ள வீடியோக்களில் குழந்தையை கொடுமைப்படுத்திய சம்பவங்கள் இருந்தன.



கொடுமைக்குள்ளான குழந்தை


தற்போது இந்த கொடுமை சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் உள்ள குழந்தை தற்போது அவரது அப்பாவின் அரவணைப்பில் பாதுகாப்பாக வளர்ந்து வருகிறார். 


Gang Rape Case : கர்நாடக கூட்டு பாலியல் வன்கொடுமையை செய்தது தமிழ்நாட்டு இளைஞர்களே..அதிர்ச்சி Report!