Crime: உத்தர பிரதேச மாநிலத்தில் தாய் மற்றும் விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


வெளியூர் சென்ற மனைவி:


உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியைச் சேர்ந்தவர் தருண் சௌஹான். இவர் ஆக்ராவில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி,  12 வயது மகன், தாய் ஆகியோர் வசித்து வந்தனர். இந்த நிலையில், இவர்கள் தருண் சௌஹான், அவரது தாய், அவரது மகன் ஆகியோர் நேற்று உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். 


போலீசாரின் கூற்றுப்படி, ஆக்ராவில் உள்ள வீட்டில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். வீட்டு வேலை செய்வதற்காக பெண் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்ததை அடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.  தருண் சௌஹான் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும்,  அவரது தாய் மற்றும் மகன் படுக்கையில் சடலமாக இருந்ததாகவும் தெரிவித்தனர். 


மேலும், சம்பவம் நடந்த நாளில், தருண் சௌஹானின் மனைவி ராஜஸ்தானில் உள்ள கோயிலுக்கு சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் மகன் மற்றும் தாயாருக்கு சாப்பாட்டில் விஷம் கொடுத்து கொலை செய்திருக்கிறார். பின்னர், அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தாய், மகனுக்கு விஷம் கொடுத்து கொன்ற கொடூரம்:


இதனை அடுத்து, உயிரிழந்த மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது, தருண் சௌஹானின் தாய் மற்றும் மகன் விஷம் கொடுத்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எந்த காரணத்திற்கு தருண் சௌஹான தற்கொலை செய்து கொண்டார்? தாய் மற்றும் மகனை கொலை செய்வதற்கான காரணம் என்ன? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தற்கொலை செய்து கொண்ட தருண் சௌகானின் தாயாருக்கு நீண்ட நாட்கள் உடல்நிலை சரியில்லை என்றும் இதனால், கடன் பிரச்னை அதிகமாக இருப்பதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், கடன் பிரச்னை குறித்து தருண் சௌகான் வருத்தப்பட்டதாகவும் அக்கம் பக்கத்தினர் கூறினர்.  


வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.


மாநில உதவி மையம் :104


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை,


ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)