ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News
ABP  WhatsApp
✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • க்ரைம்
  • கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!

கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!

Ad
செல்வகுமார் Updated at: 07 May 2024 04:30 PM (IST)

உத்தர பிரதேச மாநிலத்தில் கணவரை கட்டிப்போட்டு அவரது பிறப்புறுப்பில் சூடு வைத்த மனைவியை போலீசார் கைது செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!

கணவரை கட்டி போட்டு பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்ததாக மனைவி கைது

NEXT PREV



குடும்ப வன்முறைகள் அந்த காலம் முதல் இன்றைய காலம் வரை பல இடங்களில் நடந்து வருகிறது. குறிப்பாக, மனைவி மீது கணவன் நடத்தும் தாக்குதல்களை நாம் அதிகளவில் பார்த்திருப்போம். சமீபகாலமாக, கணவன் மீது மனைவி நடத்தும் தாக்குதல் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் உத்தரபிரேதசத்தில் நடந்துள்ளது.


கணவருக்கு சூடு வைத்த மனைவி:


உத்தரபிரதேச மாநிலத்தில் பிஜ்னூர் என்கிற பகுதியில் பெண் ஒருவர் தனது கணவரை சித்ரவதை செய்துள்ளார்.  இதையடுத்து, கணவர் காவல் நிலையத்தில் புகாரளித்ததையடுத்து, மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் குறித்து கணவர் மனன் ஜைதி தெரிவித்ததாவது, என் மனைவி மெஹர் எனக்கு போதைப்பொருள் கொடுத்தார். அதையடுத்து, எனது கைகளையும், கால்களையும் கட்டி போட்டார். பின்  சிகரெட்டால் உடலில் சூடு வைத்தார். மேலும் பிறப்புறுப்பிலும் சிகரெட்டால் சூடு வைத்தார் என கணவர் தெரிவித்தார்.



கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!


கணவர் புகார்:


இதையடுத்து, மனைவி கொடுத்த தொந்தரவு தாங்க முடியாமல், காவல் நிலையத்தில் மனன் ஜைதி புகாரளித்தார். மேலும், புகாரின் போது மனைவியை தாக்கிய காட்சிகள் பதிவாகிய சிசிடிவி பதிவுகளை காவல் நிலையத்தில் கொடுத்தார். அதில் மனைவி, கணவரை தாக்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது. இதையடுத்து, சிகரெட்டால் கணவரின் உடல் உறுப்புகளை சூடு வைத்ததற்காக அவரது மனைவி கைது செய்யப்பட்டார். 


மனைவி கைது:




மெஹர் ஜஹான் என அடையாளம் காணப்பட்ட அந்த பெண், அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் சியோஹாரா மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டார். மெஹர் ஜஹான் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) கீழ் கொலை முயற்சி, தாக்குதல், சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு எதிராக சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் புகாரைப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை கண்காணிப்பாளர் தரம்பால் சிங் தெரிவித்தார். 


Also Read: இளம் பெண்ணிடம் போன் நம்பர் கேட்ட விவகாரம்; தொழிலாளி தலை துண்டித்து படுகொலை - நிலக்கோட்டை அருகே பயங்கரம்




Published at: 07 May 2024 04:30 PM (IST)
Tags: Woman cigarette UP Husband
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.