கேரளாவின் கொச்சியைச் சேர்ந்தவர் திருநங்கை ஷெரின் செலின்.இவர் மாடலாகவும், நடிகையுமாகவும் உள்ளார். இவர் கொச்சியின் சக்கரபரம்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் ஷெரின் செலின். இவரின் சொந்த ஊர் ஆலப்புழா என்றும் இரண்டு வருடங்களாக கொச்சியில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.


என்ன காரணம்? 


ஷெரின் செலின் சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. சொந்த பிரச்னைகள் காரணமாக துயரத்தில் இருந்ததாகவும்,இதனால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகவும் அவரது நண்பர்கள் சிலர் குறிப்பிட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலைப்போல தெரிவதாகவும், மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  உடற்கூராய்வு முடிவுக்கு பிறகே உண்மையான காரணம் தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.






தொடரும் மர்மங்கள்...


கேரளாவில் சில தினங்களுக்கு முன்பு நடிகை ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்த இளம் மாடலும், சிறு வயது நடிகையுமான சஹானா மே 12, வியாழன் அன்று தனது 21வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆனால் அன்று இரவு, நள்ளிரவு 1 மணியளவில், சஹானா இறந்து கிடப்பதாக காசர்கோடு மாவட்டத்தில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது.


மே 13 ம் தேதியான இன்று சஹானாவின் குடும்பத்தினர் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று காவல்துறையினருக்கு அளித்த புகாரின் அடிப்படையில் அவரது கணவர் சஜ்ஜத்தை காவல்துறையினர் கைது செய்தனர்.


இதுகுறித்து சஹானாவின் தாயார் அளித்த தகவலில், “என் மகள் ஒருபோதும் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோலை இல்லை. அவளை நிச்சயம் கொலைதான் செய்திருப்பார்கள்.  சஹானா அப்பொழுது என்னிடம் அவரது கணவர் வீட்டார்கள் சித்ரவதை செய்வதாக கூறி என்னிடம் அழுவாள். தினமும் அவரது கணவர்  குடித்துவிட்டு வந்து பிரச்னையை செய்வதுதான் வழக்கம் எனக் குறிப்பிட்டார். இந்த சம்பவத்திலும் போலீசார் அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.