திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி - வந்தவாசி நெடுஞ்சாலையில் ஆகாரம் ஊராட்சிக்குட்பட்ட வாரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (47), இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (41). இவர்களுக்கு திருமணமாகி யோகேஸ்வரி (16), ஹேமமாலினி (9) ஆகிய 2 மகள்களும், கவுரிசங்கர் (6) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் மூவரும் அங்கு உள்ள அரசினர் பள்ளியில் பயின்று வருகின்றனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் மூர்த்தியின் மாமனாரான ஆரணி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கலைச்செல்வி, தனது கணவரிடம் கூறி, தன்னுடைய வீட்டு பத்திரத்தை தந்தை ஏழுமலையிடம் கொடுத்துள்ளார். பின்னர் அவர் பத்திரத்தை அடமானம் வைத்து கடனாக பணத்தை பெற்றுள்ளார். அதன் பிறகு நீண்ட நாட்களாகியும் கலைச்செல்வியின் தந்தை ஏழுமலை அடமானம் வைத்த பத்திரத்தை மீட்டு கொடுக்கவில்லை.



இதனால் கணவன், மனைவி இருவருக்கும்  இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி தனது குழந்தைகளின் முன்னிலையிலேயே, மனைவி கலைச்செல்வியை சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார் இதனால் தலையில் இரத்தம் தெரித்துள்ளது சம்பவ இடத்திலேயே மயக்கம் கீழே விழுந்துள்ளார். சென்று அருகில் பார்த்த மூர்த்தி மூச்சு இல்லாமல் இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பிறகு கலைச்செல்வியை நாம் தான் கொலை செய்துள்ளோம் என எண்ணி மனவேதனை அடைந்துள்ளார். கலைச்செல்வி இறந்ததும், மூர்த்தி வீட்டின் அருகில் தனது நிலத்திற்கு வேகமாக  சென்று  அங்குள்ள  மரத்தில் மன வேதனையுடன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 



இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், தாலுகா காவல் நிலைய  ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி, 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மனைவியை கொன்றுவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்டதால் 3 குழந்தைகள் அனாதையாகி உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம் Sneha Suicide Prevention helpline – 044-2464000 State suicide prevention helpline – 104 ,iCall Pychosocial helpline – 022-25521111