திருவண்ணாமலை  அடுத்த அழகானந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி வயது (27). இவர் ஆட்டோ ஓட்டிவருகிறார் இவருக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளது. இந்த தம்பதியனருக்கு இதுவரையில் குழந்தை இல்லை. இந்நிலையில் திருவண்ணாமலை அருகே  உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை வீரமணி ஒருதலையாக காதலித்ததாக தெரிகிறது. பலமுறை அந்த மாணவியை பின் தொடர்ந்து காதலிக்க கூறியுள்ளார். ஆனால் மாணவி இந்த காதலை ஏற்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.


அதனைத்தொடர்ந்து மாணவியை விடாமல் தொடர்ச்சியாக காதலிக்க வேண்டும் எனக்கூறி மிரட்டி வந்துள்ளார். இந்நிலையில் மாணவி ஒருநாள் உங்களுக்கு தான் திருமணம் ஆகிவிட்டது எதற்காக என்னை தொல்லை செய்கிறீர்கள் எனக் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு வீரமணி மாணவியிடம்  எனக்கு திருமணம் ஆகிவிட்டது உண்மைதான். ஆனால் இதுவரையில் எனக்கு குழந்தை இல்லை என்றும், அதுமட்டுமின்றி உன்னை நான் உன்மையாக காதலிக்கிறேன் உன்னை என்னால் மறக்கமுடியவில்லை” என்று தேவையற்ற ஆசைவார்த்தைகள் கூறிவந்ததாகத் தெரியவந்துள்ளது.




அதன் பின்னர், மாணவியிடம் ஆசைவார்த்தைகளை கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.  இதை யாரிடமும் கூறக்கூடாது என கூறி மாணவியை எச்சரித்தாராம். இதனால் பயந்துபோன  மாணவி யாரிடமும் கூறவில்லையாம். இதை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொண்ட வீரமணி, மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை  செய்துள்ளார். வீரமணி பாலியல் வன்கொடுமை செய்தும், பயமுறுத்தியும் தொல்லை செய்ததை தாங்கமுடியாமல் மன வேதனை அடைந்த மாணவி, இதுதொடர்பாக யாரிடமும் கூறாமல் பயந்தே இருந்து வந்துள்ளார்.


ஒருகட்டத்திற்கு மேல் ஆட்டோ ஓட்டுநர் முனுசாமியின் தொல்லை தாங்கமுடியாத மாணவி அவரது பெற்றோரிடம் இச்சம்பவம் பற்றி கூறி கதறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தாயார் திருவண்ணாமலையில் உள்ள  அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் காவல்துறையினர் , பாதிக்கப்பட்ட மாணவியை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் நடத்திய சோதனையில் மாணவி 2 மாதம் கருவுற்றிருப்பது தெரியவந்தது.




 


அதன் பின்னர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் வீரமணியை  கைது செய்து. காவல்நிலையத்திற்கு அழைத்து அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மாணவியை வன்கொடுமை செய்தது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டுள்ளார். அதனைத்தொடர்ந்து அனைத்து மகளிர் காவல்துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


நம்ம வெற்றிக்கு விசிக முக்கிய காரணம் - காங்கிரஸ் MP பேச்சு | MP Jothimani Speech | Thirumavalavan